https://m.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ https://m.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ
வெள்ளி, 11 மார்ச், 2022
புதன், 2 மார்ச், 2022
Murugan
#### செவ்வாய் நீசம் #### என்ன செய்வது நண்பரே,,,? செவ்வாய் பலம் பெற என்ன செய்யலாம்,, எதை பின்பற்றலாம்,,,??
அதாவது செவ்வாய் பல குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தவிர்ப்பது?என்று கேட்பதே உத்தமம்,,,
செவ்வாய் அசையா சொத்து,,,
இளைய உடன் பிறப்பு ,,,
ரத்தம்,,, வீரம் ,,,,வீரியம்,,
இதற்க்கெல்லாம் அதிபர்,,,,,ஆவார்,,,
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"என்பது பழமொழி அந்த இளைய தம்பி செவ்வாய் தான்,,
செவ்வாய் பகவான் நீசம் எனில் செவ்வாய் சுத்தமாக பலமின்மை என பொருள்,,அல்ல,,,
சகோதர உறவுகள் நமக்கு உதவி செய்யும் இடத்தில் இல்லை,,,
அதாவது நமக்கு உதவி செய்யும் சூழலில் இருக்க மாட்டார்கள்,,
இளைய உடன்பிறப்புக்கு
சிறு பொருளாதார தேக்கம் இருக்கும்,,,அவ்வளவே,,
மற்றும் 3ஆம் அதிபர் மற்றும் 3ஆம் வீட்டில் உள்ள கிரகம் லகனத்துக்கு ஏதுவாக இருப்பின் இளைய உடன்பிறப்பு நல்லாவே இருப்பார்,, நமக்கும் உதவி செய்வார்,,
இதே போல செவ்வாய் நீசம் வீர்ய காரகன் நீசம் ,,,,இது தாம்பத்ய துக்கு சுகமில்லை என்றும் சொல்லல் ஆகாது,
,3ஆம் வீட்டு அதிபர் மற்றும் 3ஆம் வீட்டில் உள்ள கிரகம் நல்ல நிலையில் இருந்தால் நலமே,,,
அதிலும் செவ்வாய் கடக கட்டத்தில் ஆயில்யம் சாரத்தில் மட்டுமே நீசம் ஒழிய,,,புனர்பூசம், பூசம், சாரத்தில் நின்றால் நீசம் அல்ல,,
கடக கட்டத்தில் செவ்வாய் இருந்தாலே செவ்வாய் நீசம் அது பல(மி)னில்லை என கொள்ள வேண்டாம்,,,,
செவ்வாய் ஆயில்யத்திலேயே நீசம் ஆனாலும் ,,உங்களுக்கு வீடு ,நிலம், கிடைக்காது,, பெண்ணுக்கு கணவன் நிலைக்க மாட்டான்,, வீரிய பற்றாக்குறை ஆகிவிடும் என்று சொன்னால்
பலன் தவறாகிவிடும்,,,
நீச கிரகதிற்கு காலம் செலவு செய்து கணிப்பது நன்று இல்லை எனில் பலன் தவறாகும்,,,,,
செவ்வாய் நீசமே ஆகினும் செவ்வாயின் அனுக்கிரகம் பெற முடியும்,,,தான்
கீழ் கூறப்பட்டவை
இயல்பாகவே பின்பற்றிய வர்க்கம் தான் நம் வர்க்கம்,,
இதை மீண்டும் நாம் தொடர்ந்தால் செவ்வாய் நமக்கு நீச பலனை கொடுப்பதும் இல்லை,,
பெண்களுக்கு செவ்வாய் நீசம் ஆகி இருந்தால்,,,,
தலை முடியை நன்றாக நடு வகிடு எடுக்க வேண்டும்,,
நெற்றியில் நல்ல தரமான குங்கும பொட்டு பெரிதாக வைக்க வேண்டும்,,ஸ்டிக்கர் பொட்டு ஆகாது,,
புருவ முடிகளை சிரைக்கவோ பிடுங்கவோ கூடாது,,, (இயன்றால் புருவ முடிகளுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து அடர்த்தியாக வளர்த்து வரவேண்டும்,,,,)
வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை என்றால் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்,,
வீட்டில் நன்றாக தீபம் பொறுத்த வேண்டும்,,
வாழ்வரசியாகிய பெண் தினமும் தலையில் பூசூடி (மல்லிகை) கொள்ள வேண்டும்,,,தலை,முடிகளை பேய் போல பறக்க விட கூடாது,,,
ராஜ அலங்காரத்தில் முருகன் புகைப்படம் பூஜை அறையில் நிறுத்த வேண்டும்,,
சமையல் அறை தான் தெய்வம் என எண்ணி ரொம்ப சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,,,,
வீட்டுக்கு வந்த பெண்களுக்கு குங்குமம் மற்றும் குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும்,,,
துவரம் பருப்பு சாம்பார்,,,துவரை சட்னி,,,,
பீட்ருட்,, தர்பூசனி,,சிகப்பு தண்டு கீரை,,
அரைக்கீரை,, தண்டுக்கீரை ,,எல்லா கீரையும்,,,மற்றும்
(செவ்வாழை+தேன்)
மாதுளை பேரீட்சை குதிரைவாலி அரிசி கஞ்சி,,
இவை எல்லாம் தினமும் ஏதாவது உண்ண வேண்டும் ,,,,
தினமும் உண்ணுகிறோமோ இல்லையோ செவ்வாய் கிழமை இதில் ஏதேனும் ஒன்றை உள்ளே தள்ளி விடவும்,,
ஆட்டுக்கு பிடித்தது அகத்திகீரை அதை உண்ணுவதும் செவ்வாய் பலமே,,
வருடம் ஒரு முறையாவது ரத்தம் தானம் செய்வது சிறப்பு,,
செவ்வாய் பலகுறைவு எனில் திருஸ்டி எளிதில் விழும்,,,,,
இந்த திருஷ்டி மூலமே ஒருவகையான பொருளாதார தேக்கம் உண்டு தான்,,,
சரியாக வெள்ளி, செவ்வ்வாய்க்கு திருஸ்ட்டி எடுப்பதும் நலமே,,,
அதன் மூலம் பொருலாதார தேக்கம் மாற்றம் அடையும்,,
மற்றும்
உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்தல் அவசியம்,,,,,
முரட்டு தனமான உடற்பயிற்சி யாராக இருந்தாலும் தவிர்க்கவும்,,
செவ்வாய் உச்சம் ஆகும் வீடு மகரம் இது கால் முட்டிகளை குறிக்கும் ,,,,
இந்த கால் மூட்டுக்கு சிறு சிறு பயிற்சி,, சின்ன மெதுநடை,, போதும்,,,முட்டிகள் வலு குறைந்தால் செவ்வாய் சார்ந்த காரக பிரச்சனைகளில் போராட முடியாது,,,,
கால்பயிற்சி கை பயிற்சி என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுதிருக்கோவில் trust மூலம் சொல்லி கொடுத்து சென்றிருக்கிறார்,, அதை எல்லாம் நாம் பயன்படுத்துவது நல்லது,,,
செவ்வாய் வலு குறைவு எனில் முதலில் உடலில் தான் அதை சீர் செய்ய வேண்டும்,,
செவ்வாய் அங்காரகன் அங்க காரகன்,,அங்கம் என்றால் உடல்,,
கால புருஷனின் வீரிய காரகன் செவ்வாய்,, வீரிய ஸ்தான அதிபர்,,
வீரிய ஸ்தானம் என்பது முயற்சி ஸ்தானம் மட்டும் அல்ல உடற்பயிற்சி ஸ்தானமும் கூட,,,
,, உடலை செழுமையாக வைத்து கொண்டால் போதும்,,,செவ்வாய் நீச பலனை தராது,,,,
உடல் ஆரோக்கியம் இருந்தால் உழைத்துக்கொள்ளலாம் அதன் மூலம் சொத்துக்கள் வாங்கி கொள்ளலாமே,, வருடம் ஒருமுறை மலைக்கோயில் சென்றுவருவதும் கந்த சஷ்டி படிப்பதும் கேட்பதும் நலம்,,,,
இந்த பதிவை செவ்வாய் நீசம் ஆனவர்கள் மட்டும் அல்லாது யாவரும் பின்பற்றி வந்தால் செவ்வாயின் அனுக்கிரகம் உண்டுதான்,,,
ஓம் திருச்செந்தூர் முருகன் துணை,,
சதிஷ் குமார்
Maruti CSD Car April month Price List - Ajmer 2021
Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name Description Type ...
-
Staff Nurse Govt Jobs 2016 Are you looking for staff nurse vacancy 2016 after completion of degree/diploma in nursing? Well, here we...
-
Current LTC Block Year is 2022-2025 January 21, 2022 The current LTC Block Year period commenced from 1.1.2022 and will end in 2025 LTC ...
-
CGHS Criteria for Dependants family Members and Age Limit 1. For CGHS cards , as dependant ,what is the meaning of the word “family” ...