திங்கள், 25 டிசம்பர், 2023

Risaban

 "ரிஷப ராசி ரிஷப லக்னம்"அல்லது "சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை,வெளிநாட்டு உத்தியோகம்(job) தொழில் இது சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


♦யாரெல்லாம் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை,வெளிநாட்டு உத்தியோகம்(job), தொழில் இது இவர்களுக்கு ஒத்து வராது.


♦இவர்கள் வெளிநாடு செல்வதன் மூலம் இவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனங்களும் முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் இவர்களுக்கு வாழ்க்கையில் சுத்தமாக இருக்காது.


♦வெளிநாடு சென்று இவர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை இவர்களால் இவர்களுக்காக இவர்கள் விருப்பத்திற்காக என்று அனுபவிக்க முடியாது.வெளிநாடு சென்று இவர்கள் சம்பாதித்த பணத்தையும் இவர்களால் சேமித்து வைக்க முடியாது அந்த பணம் இவர்கள் கையில் தங்காமல் நிற்காமல் போய்விடும்.


♦வெளிநாடு சென்று இவர்கள் எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் இவர்களுக்கு எந்த விதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்காது.வெளிநாடு செல்வதால் இவர்கள் வாழ்க்கையில் எந்த பயனும் கிடையாது.


♦இவர்கள் வெளிநாடு சென்று எத்தனை காலங்கள் கஷ்டப்பட்டாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றம் வளர்ச்சி என்பது இருக்காது.எந்த நிலைமையில் இவர்கள் வெளிநாடு சென்றார்களோ அதே நிலைமையில் தான் இவர்கள் திரும்பி வருவார்கள்.


♦அதேபோன்று இவர்கள் வெளிநாட்டு சென்று சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் அனுபவிக்க முடியாது அந்த பணத்தை இவர்களுடைய குடும்பத்தினர் அல்லது அடுத்தவர்கள் தான் அனுபவிப்பார்கள் .


♦அதாவது தேவையில்லாத வெட்டிச் செலவுகளுக்கு விரைவு செலவுகளுக்கு தான் இவர்கள் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் செலவாகிக் கொண்டிருக்கும்.இவர்களுடைய தேவைக்காக ஆசைக்காக விருப்பத்திற்காக என்று இவர்கள் அந்த பணத்தை அனுபவிக்க இயலாது.


♦வெளிநாடு சென்று தங்களுடைய வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை உழைப்பை வீணாக்குபவர்கள் இவர்கள்தான்.

இவர்கள் எப்பொழுது எல்லாம் வெளிநாடு செல்கின்றார்களோ அப்பொழுது எல்லாம் இவர்களுக்கு அளவுக்கு அதிகமான இவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் செயல்பாடுகள் இவர்களுக்கு வந்து விடும்.


♦வெளிநாடு சென்று இவர்கள் படித்தார்கள் என்றால் இவர்கள் படித்த அந்தப் படிப்பு(degree) பட்டம் இவர்களுக்கு பயன் தராது பலன் கொடுக்காது.படித்த படிப்பு அந்தப் பட்டம் இவர்களுக்கு வேலை செய்யாது அதாவது உபயோகப்படாது.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


🌹மேற்கொண்டு யாரெல்லாம் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ அல்லது சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இந்த பதிவில் நான் சொல்லியிருக்கும் விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.


🌹அடுத்த பதிவில் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.


🌹ஜோதிடம் சார்ந்த ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் மற்றும் ஜாதகம் பார்க்க ஜாதகம் எழுத என்னை தொடர்பு கொள்ளவும்.


🌹Call me My mobile number and WhatsApp number is 98402 90714 


🌹ஜாதகம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு கட்டணம் 400 ரூபாய் ஆகும்.கட்டண சேவை செலுத்தி ஜாதகம் பார்ப்பவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்.


🌹மேலும் ஜோதிடம் சார்ந்த Online வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜோதிடம் கற்க ஆசைப்படுபவர்கள் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய WhatsApp  numberக்கு Message செய்யவும்.

98402 90714 

.

🌹அதேசமயம் இலவச ஜாதக பலன்கள் நான் யாருக்கும் சொல்வது கிடையாது

.இலவச ஜாதக பலன் பார்க்க நினைப்பவர்கள் என்னுடைய Facebook messenger மற்றும் WhatsApp numberக்கு தொடர்பு கொள்ள வேண்டாம்.

(horoscope Consulting fees 501 hundred).

Earth prdikion


 வாழ்க வளமுடன்!


வீடு, பூமி அடைய எளிய முறை;


  பலருக்கும் பூமி யோகம் அடைய தடை உள்ளது. பூர்வீக சொத்தை பிரித்து அனுபவிக்க முடியாது. சிலருக்கு வீட்டுக்கு பக்கத்தில் விவசாய நிலம் , நீர் பாசன இடத்தில் வீடு, ஏன் இன்று சென்னை போன்ற நகரத்தில் வெள்ளத்தில் பாதிக்கும் இடத்தை தவிர்த்து மேடுள்ள நல்ல இடங்களில் வீடு வாங்க நினைப்பவர்கள், அல்லது வெளிநாடுகளில் இடம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வாங்க வேண்டிய இடத்தின் ஒரு சிறு சிட்டிகை அளவு மண் எடுத்து பத்திரப்படுத்தவும் , இடம் அருகில் உள்ளவர்கள் நேரில் அந்த நேரத்தில் சென்று எடுத்து சாப்பிடலாம் .


   எடுத்து வந்த சிறு சிட்டிகை மண்ணை பூமி வசிய நேரத்தில் 2024 பிப்ரவரி 27 செவ்வாய் அன்று பூஜை அறையில் பூஜித்து அல்லது முருகன் ஆலயம் சென்று வழிபட்டு சாப்பிட நேர்மையான வழியில் அந்த பூமி யை அடையலாம் .


  இந்த 3.11pm முதல் 3.26pm வரை என்பது சிதம்பரம் , குடந்தை, அரியலூர், நெய்வேலி , மயிலாடுதுறைக்கு சுற்றிலும் உள்ள பகுதிக்கு பொருந்தும் . உங்கள் ஊர்,மாவட்டம் , நாடு பொருத்து நேரத்தில் ஏற்ற இறக்கங்களை ஜோதிடரிடம் கேட்டு பயனடைய 


வாழ்த்துக்கள்.  வாழ்க வையகம்!!

செவ்வாய், 10 அக்டோபர், 2023

Love love love

 புல்மீல்ஸ் வித் ஜோதிடம்...


ஜோதிடத்தில்.... காதல்....


1/5/9 ஆத்மார்த்தமான / உண்மைான / தெய்வீகமான காதல்... 

இது ஒருவர் மீது நம்பிக்கை வைத்து உண்யைாக முழுமையாக தன்னை அர்ப்பணித்து செய்யும் காதல்... இதில் காமத்தின் அளவு குறைவு... ஆனால் அன்பின் அளவு அதிகம்... அவ்வளவு எளிதில் யாரையும் நம்பாது... ஒருமுறை நம்பினால் கடைசி வரை தான் ஏமாற்றப்பட்டாலும் கூட அவரையே நினைத்து உருகி காதல் செய்யும்....


3/7/11 கண்டதும் காதல் / காமத்திற்கான காதல் / காத்து வாக்குல ரெண்டு காதல்... இது பார்த்தவுடனே பரவசம் ஏற்பட்டு உடனே ஏற்படும் காதல் அன்பு குறைவு.... காமம் அதிகம்...  அதாவது அழகு இச்சை இது அதிகமாக அதிகமாக யாருடனும் காதல் கொள்வார்கள்... உண்மை தன்மை குறைவு... எளிதாக மற்றவர்கள் இவர்களை நம்பி ஏமாந்து போவார்கள்... அதாவது நம்பவைத்து காதல் செய்வார்கள்... அதாவது லக்னத்தின் 3/7/11 எதிர்பாலுக்கு அதாவது ஏழாம் இடத்திற்கு 1/5/9 ஆக வரும்... இவருக்கு கண்டதும் காதல் எதிர்பாலருக்கு  அன்பின் பால் காதல் ஏற்படும்...


2/6/10 கடமைக்கு காதல்... இதில் அன்பும் குறைவு இச்சையும் குறைவு.... எனக்கும் ஆள் இருக்குன்னு சொல்லனும்னு  காதல் செய்வார்கள்... இவர்களுக்கு இது ஒரு கடமையாக இருக்குமே தவிர... உணர்வுகள் குறைவு...


4/8/12 முற்றும் துறந்த காதல் // பாலிஸ்டா சொன்னா திருமணம் கடந்த காதல் / கொச்சையா சொன்னா கள்ளக்காதல்... இது வெளியே சொல்லமுடியாத அதே நேரம் புதுசா டேஸடா வேணும் என்கிற எண்ணத்தில் வரும் மோக காதல் இது... புரியமாதிரி சொல்லனும்னா எல்லா பதார்த்தங்களும் இனிப்பாக இருந்தாலும் உருவங்கள் மாறும்போது வேறு ஒரு புது பதார்த்தத்தை உண்கிறோம் என்கிற எண்ணம் வருகிறது அல்லவா... அது போல இது நம்மை புத்துணர்ச்சி ஆக்கி கொள்ள நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் ஒரு மாறுபட்ட காதல்... 


மேற் சொன்ன விசயம் எதற்கு என்றால்... உங்கள் ஜாதகத்தில் உறவு கிரகங்கள் (உறவுகிரகஙகள் எது என்று ஏற்கனவே பதிவுகளில் உள்ளது) எந்த பாவத்தில் இருந்து காதல் வருகிறது என்று பாருங்கள் அது தான் உங்கள் தற்போதய காதல் நிலை... 


பொதுவாக இதில் 1/5/9 நிலையும் 3/7/11 என்கிற நிலையும் ஒத்து போகும்... ஒருவருக்கு 1/5/9 என்றால் எதிர்பாலுக்கு 3/7/11 ஆக வரும்... இதில் ஈர்ப்பு அதிகம்... இதில் 3/7/11 ல் இருப்பவர் தன் காதலை முதலில் வெளிபடுத்துவார்... 


அதுவே 1/5/9ல் இருப்பவர் சொல்லாமலே காதல் செய்வார்... மானசீக காதல்... ஒரு தலை காதல்...  கொஞ்சம் டைம் வேணும் யோசிச்சு சொல்றேன் என்பார் (அதுக்குள்ள 3/7/11 ல் இருப்பவர் இதயம் படத்துல வர்ற மாதிரி இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே என் இதயமேன்னு பாட்டு பாடுவார்).... 


இப்ப யோசிச்சு பாருங்க இருவருக்கும் ஜாதகத்தில் 1/5/9ல் இருந்து காதல் வந்தால் எப்படி சொல்லுவாங்க... ரெண்டு பேரும தயங்கி தயங்கி கடைசி வரை சொல்லவே மாட்டாங்க இந்த படத்துல காட்ற மாதிரி.... சொன்னாலும் ரொம்ப காலம் கடந்து தான் சொல்லிக்குவாங்க...


இதுவே 3/7/11ல் இருந்து இருவருக்கும் காதல் வந்தால் அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்பது போல் இருவரும் காதலை சொல்வார்கள் அதாவது ஒருவர் சொல்ல உடனே இன்னொருவர் ஓகே பன்னுவாங்க... மிக குறுகிய காலத்தில் நடக்கும்.... (அப்பறம் ஆள் ஆளுக்கு இச்சு தா இச்சு தா உன் கண்ணங்களை பிச்சுதான்னு ரெண்டும் பாடிகிட்டு திரிவாங்க)


அதுவே 2/6/10 என்றால் எதிர்பாலருக்கு 4/8/12 ஆக வரும் இது ஈர்ப்பு குறைவு... கிவ் அண்ட் டேக் பாலிசி அதாவது நீ ஒன்னு குடு நான் ஒன்னு தரேன் என்பது போல் ஏதாவது தேவைக்கான காதல் ஆக வரும்.... அதை தான் கடமைக்கான காதல் என்றோம்... 


இப்போது ஜாதகத்தில் 1/5/9 ல் இருந்து காதல் வந்து எதிர்பால் ஜாதகருக்கு 3/7/11 ல் இருந்து காதல் வந்தால் மேக்சிமம் காதல் சக்சஸ் ஆகும்.... இதனால் தான் 5/7தொடர்பு ஒற்றை படையில் எங்கு இருந்தாலும் காதல் திருமணம் என்றார்கள் அல்லது உறவில் திருமணம் என்றார்கள்... 


அதுவே 1/5/9 அல்லது 3/7/11ல் இருந்து ஒருவருக்கும் எதிர்பாலருக்கு அவர் ஜாதகத்தில் 2/6/10 ல் அல்லது 4/8/12ல் இருந்து காதல் வந்தால் ஆப்ரேசன் சக்சஸ் பேசண்ட் டெத் கதைதான்... எல்லாேமே ஓகே ஆகும் கடைசியில் காதல் மேக்சிமம் தோல்வியில் முடியும்...


அதுவே 2/6/10ல் இருந்து ஒருவருக்கும் எதிர்பாலருக்கு 4/8/12ல் இருந்து காதல் வந்தால் ஈர்ப்பு குறைவு என்றாலும் பிசினஸ் டீல் போல வசதி இருக்கு வேலை இருக்குன்னு காதல்  சக்சஸ் ஆய்டும்... 


இதுல ஸ்பெசல் என்னான்னா ஒருவருக்கு 3/7/11ல் இருந்தும் எதிர்பாலருக்கு 4/8/12ல் இருந்து காதல் வந்தால் சொல்லவே வேண்டாம்... ஒரே பாட்டும் கூத்தும் தான்... டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாரும் இல்ல விளையடா வாடா வில்லாலளன்னு கிளம்பிடுவாங்க... அதாவது இவங்க தான் லிவ்ங் டூ கெதர் லைப் வாழ்கிற ஆட்கள்... திருமணம் இல்லாமல் பிடிக்கும் வரை ஓன்றாக வாழ்பவர்கள்...


இன்னும் குறிப்பாக சொல்லனும்னா உறவு கிரகங்கள் உயிர் ராசியில இருந்து காதல் வந்தால் உண்மையாக இருக்கும்... ஈர்ப்பு காதல் காமம் இருக்கும்... பொருள் ராசியில் இருந்து வந்தால் ஈர்ப்பு காதல் காமம் குறைவு... இதனுடன் மேற் சொன்ன பாவங்கள் தொடர்பு உறுதியாக மேற்சொன்னவை நடக்கும்....


இப்ப உங்களுக்கு ஒரு டவுட் வரும் ஒரு கிரகத்துக்கு ரெண்டு ஆதிபத்தியம் இருக்கே ஒன்னு 1/3/5/7/9/11ம் பாவமாக வநதால் இன்னொன்னு 2/4/6/ 8 /10/12 வருமே அப்ப எதை எடுத்து கொள்வது என்று தானே... ரொம்ப சிம்பிள் சம்பந்தபட்ட கிரகம் மேற்சொன்ன எந்த பாவத்தில் இருக்குன்னு பாருங்க அதை எடுங்க... இல்லன்னா எந்த வீட்டை ஹோல்டிங் செய்திருக்கிறதோ அதை எடுங்க...


இப்ப ரெண்டு டவுட் வரும் உங்களுக்கு ஹோல்டிங் செய்வது என்றால் என்ன? உயிர் ராசி பொருள் ராசி என்றால் என்ன?

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

INCOME TAX DEPARTMENT ORDER

 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக் கடனிற்கான அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி:

ஒவ்வொரு நிதியாண்டிலும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்திற்கு தகுந்தவாறு ITR தாக்கல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இறுதியாக கடந்த ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தற்போது வரையிலும் செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி மட்டுமே நேரடியாக வருமான வரி விலக்கு பெற முடியுமா என கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது

இந்நிலையில், இது குறித்து விசாரணை செய்யப்பட்டது. அதில், மேற்கூறப்பட்டது மாதிரியான எந்த ஒரு உத்தரவும் தற்போது வரையிலும் வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது வரை செலுத்தி வரும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெறலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

வியாழன், 13 ஏப்ரல், 2023

சித்திரை கனி பார்த்தல் என்றால் என்ன ?

 சித்திரை கனி பார்த்தல் 


 👉 புத்தாண்டின் அதிகாலையில் எழுந்ததும் கனிகள், பணம், நகைகள் போன்றவற்றை கண்ணாடியில் பார்க்கும் ஒரு சாஸ்திரம் ஆகும். 


👉 புத்தாண்டு அன்று எழுந்ததும் முதன்முதலாக இவற்றை காணும் போது, அந்த புத்தாண்டு மிகவும் இனிமையாகவும், செழிப்பான ஆண்டாகவும் இருக்கும்


கனி காணுதல் தட்டில் என்னென்ன வைக்க வேண்டும்?


👉புத்தாண்டின் முதல் நாள் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் உள்ள கடவுள்களின் போட்டோக்களை துடைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்பு இரவு தூங்குவதற்கு முன் ஒரு கண்ணாடியை எடுத்து, அதை துடைத்துவிட்டு, அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய தாம்பூலத் தட்டை எடுத்து, அதில் மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை என ஒற்றை படை எண்ணில் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். பின்பு சிறு சிறு கிண்ணங்களை எடுத்து, ஒவ்வொன்றிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கல் உப்பு ஆகியவற்றை தலைதட்டாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, வளையல் ஆகியவற்றையும் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு கிண்ணத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தக் கொள்ளுங்கள். 


👉வீட்டில் அன்னப்பூரணி சிலை இருந்தால், அரிசியின் மேல் அந்த சிலையை வையுங்கள். மேலும் வீட்டில் உள்ள நகைகளையும் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்து, அதில் நீரை நிரப்பி, அதில் சிறிது பூக்களைத் தூவி, பச்சை கற்பூரத்தை சிறிது தூவி, மேலே மாவிலை மற்றும் தேங்காயை வைத்து கலசத்தை தயாரித்து, அவற்றையும் தட்டிற்கு அருகே வைக்க வேண்டும். பின் இந்த பொருட்கள் அனைத்தும் கண்ணாடியில் தெரியும்படி கண்ணாடியை எதிரே வைக்க வேண்டும்.


👉 இவை அனைத்தையும் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன்னரே தயார் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். 


👉புத்தாண்டு அன்று வீட்டின் மூத்த பெண் அதிகாலையில் எழுந்ததும், முதலில் அந்த கண்ணாடியின்  வழியே இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். பின் குளித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளோர் ஒவ்வொருவரையும் அழைத்து வந்து, இவற்றை காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இதை பார்த்த பின், ஒரு பிரசாதத்தை செய்து, கடவுளுக்கு படைத்து, ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும். இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் உட்கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வருகிற சோபகிருது புத்தாண்டின் முதல் நாளில் செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக தொடங்குங்கள்.


 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 



ஸ்ரீகுரு ஜோதிட நிலையம் 

ALP ஜோதிடர் 

AVADI MAHALINGAM J 


9840290714 / 6383824552

ஜோதிட ஆலோசனை மற்றும் ஜோதிட பற்றி அறிய

தொடர்பு கொள்ளுங்கள்


வாழ்க வளமுடன்

திங்கள், 3 ஏப்ரல், 2023

ALP

 பொது குறிப்புக்கள்


ஜாதகரின் குணம் பற்றி அறிய 5ம் பாவகம்/பேச்சு பற்றி அறிய 2ம் பாவகம்


திடீர் அதிர்ஷ்டம் 8ம் பாவக நட்சத்திர அதிபதி 8க்கு 11ல் இருந்தால்


8க்கு 6,8,10,12ல் நட்சத்திர அதிபதி இருந்தால் operation must

Operation success பார்க்க 9ம் பாவகம் பார்க்க வேண்டும்


ALP ஜாதகர் குறித்த குறிப்புகள்

7ம் இடம் spouse குறித்த குறிப்புகள்


Spouse அமையும் திசை

ALP

மேஷம்   கிழக்கு

ரிஷபம்/மிதுனம் தென்மேற்கு

கடகம்  வடக்கு 

சிம்மம்/கன்னி தென்கிழக்கு

துலாம்   மேற்கு

விறுட்சிகம்/தனுசு  வடகிழக்கு

மகரம்   தெற்கு

கும்பம்/மீனம்  வடமேற்கு


Share market தொடர்பான கேள்வி

சனி பகவான் 1,5,9 நட்சத்திர புள்ளியாக வந்தால் heavy loss/ ராகு என்றால் fluctuations or loss


Hospital துவங்க 2ம் பாவம்

Departmental stores துவங்க 4ம் பாவம் பார்க்க வேண்டும்


ALP மகரம் செல்லும் பொழுது வேதாரண்யம்/கொடியகரையில் பரிகாரம்

திதி பித்ரு பூஜை செய்யவேண்டும்


ALP மகரம் பணத்தாசை அதிகம்

5, 10ம் வீடு சுக்ரன் இருப்பின் கவனம் தேவை


குழந்தை பிறப்பு நாள் குறிக்க

கோச்சாரத்தில் 6,7,8 சுத்தம் atleast 7,8 சுத்தமாக இருக்க வேண்டும்

லக்னாதிபதி 6,7, 8ல் இருக்க கூடாது. லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும் மற்றும் நட்சத்திர அதிபதி support செய்யணும்


குரு,சூரியன் செற்கை இருப்பின் வேதாரண்யம் சிவ பெருமான் வணங்க வேண்டும் ( இரு தலைவர்கள் நீயா நானா போட்டி போட்டு முழுமை பெறாத வாழ்கை)


USA சூரியன்

UK.    செவ்வாய்

இங்கிலாந்து   செவ்வாய்

சீனா   சனி

ஜப்பான்  புதன்

பாகிஸ்தான். செவ்வாய்/ராகு

UAE  Raghu

ஆப்ரிக்கா செவ்வாய்

ஶ்ரீலங்கா  சந்திரன்

ஆஸ்திரேலியா சந்திரன்

ரஷ்யா சனி


For திருமண பொருத்தம்

பெண் ALP to ஆணின் ALP 6, 8ல் இருக்கக்கூடாது

ARP to ARP 6, 8ல் இருக்கக்கூடாது

இதே D9 அண்ட் பாவக அதிபத்யம் to predict


பிரம்ம முகூர்த்தம்

4:30a.m to 6:30a.m.

12noon to 1p.m.


பிரசன்னம் பார்ப்பது அந்த நிமிடம் கேட்கப்படும் கேள்விகள் மட்டுமே பதில்

Life timeக்கு use panna கூடாது.


தலசனுக்கு தலச்சன் திருமணம் செய்ய கூடாது என்று குறிப்பிடுவது இருவரும் நிதானமாக இருப்பார்கள் என்பதால்


Second child fourth... child fast

Third,fifth ... Child slow




நிவர்த்தி பாவகம்


*2ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 1,7,9,11

நிவர்த்தி- 2,3,4,5.



*3ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 2,8,10,12.(6)

நிவர்த்தி- 1,3,4,5,7,9,11.


*4ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 1,3,9,11

நிவர்த்தி- 2,4,5,7.


*5ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 2,4,10,12.

நிவர்த்தி- 1,3,5,7,9,11. 


*6ம் பாவகம்*

பிரச்சனைக்குரிய பாவகம்- 1,3,5,11.

நிவர்த்தி- 2,4,7,9. 


*7ம் பாவகம்*

பிரச்சனைக்குரிய பாவகம்- 2,4,6,8,10,12 

நிவர்த்தி- 1,3,5,7,9,11. 


*8ம் பாவகம்*

|பிரச்சனைக்குரிய பாவகம்- 1,3,5,7

நிவர்த்தி-2,4,9,11


*9ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 2,4,6,8

நிவர்த்தி- 1,3,5,7,9,11.


*10ம் பாவகம்*

பிரச்சனைக்குரிய

பாவகம்- 3,5,7,9

நிவர்த்தி- 1,2,4,11


*11ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 4,6,8,10

நிவர்த்தி- 1,2,3,5,7,9,11.


*12ம் பாவகம்* பிரச்சனைக்குரிய பாவகம்- 5,7,9,11

நிவர்த்தி- 1,2,3,4.

வியாழன், 30 மார்ச், 2023

ALP JOTHIDAM-அட்சய லக்ன பத்ததி

 அஷ்டம சனி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் ஏழரை சனியை விட மோசமான பலன்களை தரவல்லது. ஏழரை சனி என்பது, 3 பிரிவாக பிரித்து, விரய சனி, ஜென்ம சனி, குடும்ப சனி ஆக 2 ½ வருடங்களாக, ஏழரை வருடங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பை தரக் கூடியது. ஆனால் ஏழரை வருட பாதிப்புகளையும், 2 ½ வருடத்தில் கொடுக்கக்கூடியதுதான் அஷ்டம சனி. அப்படி என்னென்ன பாதிப்புகள் நிகழக் கூடும்.

ஜெனன ராசியை கடக ராசியாக கொண்டவர்கள் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1,2,3,4 ம், ஆயில்யம் 1,2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்? அஷ்டம சனியைக் கண்டு பயப்பட வேண்டாம்

ALP JOTHIDAR 

AVADI MAHALINGAM 

9840290714 6383824552

பிறக்கும்போது கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, இன்று கடக ராசி என்பது கிடையாது.

பிறப்பு ராசி கடக ராசியாக செல்பவர்களுக்கு, ஜென்ம நட்சத்திரம் பூசம் என்றால், சுக்ர திசை நடப்பு திசையாக இருக்கும் பட்சத்தில், சிம்ம ராசி அட்சய ராசியாக செயல்படும். அவர்கள், சுக்ரனின் பெயர்ச்சியை கவனித்தால் போதுமானது. சனி பெயர்ச்சி பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

தசா புத்திகள் மாறும் போது, ராசிகளும் அதனுடைய குணங்களும் தன்மைகளும் மாறுபடும். உதாரணமாக, சூரிய திசை நடப்பில் இருந்தால், சூரியனின் நகர்வை மட்டும் பார்த்தால் போதுமானது. அட்சய ராசியின் தன்மைகளைப்பற்றி அறிய, அட்சய லக்ன பத்ததி நூல் 2-ம் பாகத்தை படிக்கவும்.

உதாரணமாக, பிறப்பு ராசி மிதுன ராசியாக, மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை 1,2,3,4 ம் பாதம், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, இன்று கடக ராசி அட்சய ராசியாக பூச நட்சத்திரத்தின், சனி மகா திசை நடப்பவர்களுக்கு, அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அட்சய லக்னம்: முதலில் அட்சய லக்னம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். பிறப்பு லக்னத்திலிருந்து, வயதின் லக்னத்தை கொண்டு பலன் பார்க்கக் கூடிய ஜோதிட முறையை அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. ஒருவருடைய பிறப்பின் தோற்றம் மாற மாற, எப்படி அவர்களுடைய தேவைகளும், குணங்களும் மாறுபடுகிறதோ, அதே போல் வயது வளர வளர, லக்னமும் வளரும் என்பதே அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்.


அட்சய ராசி என்பது, பிறப்பு நட்சத்திரத்தின் தசா புத்தியின் நகர்வை கொண்டு, தற்சமயம் நடக்கக்கூடிய தசாயின் ராசியே அட்சய ராசியாகும்.

உதாரணமாக, புனர்பூசம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, குரு மகா திசை பிறப்பு தசையாக இருக்கும். தசா புத்தி இருப்பு, குரு மகா திசையின் மொத்த வருடம் 16-ல், புனர்பூசம் 3-ம் பாதத்தின் இருப்பு தோராயமாக, 8 வருடம் முதல் 12 வருடம் வரை மட்டுமே இருக்கும். தற்போது ஜாதகருக்கு 16 வயது என்று வைத்துக் கொண்டால், சனி தசை நடக்கும். இப்போது அந்த ஜாதகருக்கு அஷ்டம சனியின் தாக்கம் உண்டு. இந்த வயதிற்குரிய பலனாக, படிப்பில் கவனமின்மை, சரியில்லாத நண்பர்களின் தொடர்புகள், கவன சிதறல்கள், தேவையற்ற விஷயத்தில் தலையிட்டு கெட்ட பெயர்களை உருவாக்கிக் கொள்வார்கள், பெற்றோர்களின் சொல் பேச்சு கேளாமை, வீட்டை விட்டு வெறியேறுவது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்.

இதுபோல், ஒவ்வொருவருக்கும் பலன் பார்க்க வேண்டும். நடப்பில் அட்சய ராசி கடக ராசியாக உள்ளவர்கள் மட்டுமே, அஷ்டம சனியால் பாதிக்கப்படுவார்கள். அதே போல், நடப்பில் அட்சய ராசி, மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்பவர்களுக்கு மட்டுமே ஏழரை சனியின் பாதிப்பும் ஏற்படும். அவர்களே, கவனமாக இருக்கக் கூடியவர்கள். நடப்பு அட்சய ராசி, விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் செல்பவர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு ஏற்படும். பிறப்பு ராசி மகர ராசியாகவோ, கும்ப ராசியாகவோ, மீன ராசியாகவோ இருப்பவர்கள் ஏழரை சனியை கண்டு பயப்படவேண்டாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரன் தசையான சனி திசை நடப்பவர்கள் மட்டுமே, தற்போதைய சனி பெயர்ச்சியால் மாற்றங்களை சந்திப்பார்கள். இவர்கள் மட்டும் சனி பெயர்ச்சியின் தன்மையான ஜீவனம், பதவி உயர்வு, வேலையாட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் முதலீடு செய்பவர்கள், எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள், கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால் மட்டுமே போதுமானது. முதியவர்களாக இருப்பின் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். மற்ற தசை நடப்பவர்கள், சனி பெயர்ச்சியை கண்டு பயப்படவேண்டாம். ஏழரை சனியோ, அஷ்டம சனியோ, அர்த்தாஷ்டம சனியோ, கண்ட சனியோ அவர்களை பாதிக்காது. எந்த வயதினாராலும், தற்போது சனி திசை நடந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

சனி பகவானின் அனுக்கிரஹம் இல்லாமல், ஒருவர் தொழில், வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற முடியாது. அதனால், சனி பகவானின் அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம்.

இந்தக் கட்டுரையை படிக்கும்போது, ஜோதிடம் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இருந்தால், அவர்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கச் சொல்லி கேட்கவும்.

அட்சய லக்னம், அட்சய ராசி என்பது உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாலமாக அமையும் என்பது நிச்சயம்.

சூர்ய புத்ராய போற்றி !

சனீஸ்வராய போற்றி !!

அட்சய ராசி வாழ்க வளர்கவே!

- முனைவர் சி.பொதுவுடைமூர்த்தி



வெள்ளி, 24 மார்ச், 2023

சனி சிக்னாபூர்

 மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு 

#சீரடி அருகே உள்ள #சனி_சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.

சனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.


எத்தனை காலம் என்று யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.


காலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். #வானம்தான்_எனக்குக்_கூரை என்று கூறிவிட்டார்.


இன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.


சிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.


சனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா? முடியாதல்லவா? ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், 

ஆனால் #எந்த_வீட்டிற்கும்_கதவுகள்_இல்லை_பூட்டுக்களும்_இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். 

(யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.


அதுதான் ஆச்சரியமான விஷயம்.


வாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள்...

வியாழன், 23 மார்ச், 2023

கோட்சார கிரக சேர்க்கையினால் உலகம் ஸ்தம்பிகுமா

 🔹️மிரட்டும் ஏப்ரல்-மே 2023 கோச்சாரம்🔹️



🔹️ கோச்சாரத்தில் ஏப்ரல் 14 முதல் மேஷத்தில் உச்ச சூர்யன் ராஹூவோடு சேர்கிறது. 


🔹️ புதன், குரு & சூர்யன் ஆகிய மூவரும் மேஷத்தில் ராஹூவோடு சேர்ந்து மூல த்ரிகோண பலத்தில் உள்ள ஷனியின் பார்வையில் பலவீனமாக இருப்பார்கள்.


🔹️ சூர்யனின் சிம்ஹ ராசிக்காரர்கள் & லக்னகாரர்கள் ஏப்ரல் 14 முதல் மே 15 வரை கவனமாக இருக்க வேண்டும்.


🔹️ புதனின் மிதுனம், கன்யா ராசி & லக்னகாரர்கள் மார்ச் 31 முதல் ஜூன் 7 வரை கவனமாக இருக்க வேண்டும்.


🔹️ குருவின் தனுஷ், மீன ராசிக்கார்கள் &  லக்னகாரர்கள் அடுத்த வருஷம் (2024) மே 1ம்  தேதி வரை கவனமாக இருக்க வேண்டும்.


ஜாதக ஆலோசனைக்கு 

ALP JOTHIDAR 

AVADI MAHALINGAM J 

பனர்பூ தோஷ நிவர்த்தி

 புனர்பூ தோசம்!!

சனி சந்திரன் சேர்க்கை ஒரு ராசியில் இருந்தால் புனர்ப்பு தோஷம் ஆகும்

இந்த இணைவானது 1-7 ல் இருந்தாலும் தோஷம் ஆகும்

இந்த தோஷத்தின் தன்மையானது முற்பிறவியில் தாயை சரியாக கவனித்துக் கொள்ளாத காரணத்தால் ஏற்படும் தோஷம் ஆகும்

இந்த தோஷமானது திருமண காலத்தை தள்ளிப் போட வைக்கும்

ஆணுக்கு 30 வயதும் பெண்ணுக்கு 25 வயதும் ஆன பிறகு திருமண காலம் கைகூடும்

திருமணம் ஏற்பாடு செய்யும் பொழுது முடிந்தவரை சீக்கிரம் அதாவது அறுபது நாளுக்குள் திருமணம் செய்ய வேண்டும் காரணம் ஆண் பெண் இருவரையும் இந்த தோஷமானது பிரித்தாளும் வேலையை செய்ய வைக்கும்.

புனர்பூ தோசம்

நீங்க பரிகாரம்

பிரதோஷ நாளன்று சிவன் கோவிலில் சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜை முடிந்து தயிர் சாதம் பிரசாதம் அன்பர்களுக்கு கொடுக்க வேண்டும் சனி பிரதோஷமாக இருந்தால் மிகவும் சிறப்பு!!

வயதான துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்க தோஷத்தின் வீரியம் குறையும்:!


ALP JOTHIDAR 

AVADI MAHALINGAM J

செவ்வாய் சனி கேர்க்கை

 செவ்வாய் சனீஸ்வரர் சேர்க்கை:


செவ்வாய் சனீஸ்வரர் சேர்ந்திருந்தாலோ அல்லது ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை இருவரும் இணைந்து பார்த்தாலோ ஏற்படும் பலன்களை இப்போது பார்ப்போம்


 பிறந்த ஜாதகத்தில் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட தன்மைகளை கொண்ட சனியும் செவ்வாயும் இணைந்து இருந்தாலோ இவை இரண்டும் ஏதேனும் ஒரு பாவத்தை தொடர்பு கொண்டாலோ கீழ்கண்ட பொது  பலனை அந்த ஜாதகர் அனுபவிக்க நேரும் 


லக்னத்திற்கு 1, 2, 4, 7,12 செவ்வாய் சனி இணைந்து இருந்தால் காலதாமதமாக திருமணத்தை தரும் சிலருக்கு 40 வயது வரை திருமணம் ஆகாத நிலையில் சிலருக்கு திருமணம் ஆகி பிரச்சனையும் வேதனையுமாக இருக்கும் சிலருக்கு மனம் முடிவு ஏற்படும் 


சரியான பொருத்தம் இல்லாத வரனை தேர்வு செய்தால் வாழ்நாள் முழுவதும் போராட்டமாக இருக்கும் 


பொதுவாக சனி, செவ்வாய் இணைந்த சாதகருக்கு ஒரு பிரச்சனை முடிந்தால் புது பிரச்சினை ஆரம்பமாகும்


 விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது 


சனியும் செவ்வாயும் இணைந்து பார்வையிட்ட இடங்களுக்கு உரிய உறுப்புகளில் அறுவை சிகிச்சை அல்லது நோய் ஏற்படும் சனீஸ்வரர் தான் இருக்கும் இடத்திலிருந்து 3 7 10 இடங்களையும் செவ்வாய் தான் இருக்கும் இடத்தில் இருந்து 4 7 8 ஆம் இடங்களையும் பார்வை செய்வார்கள் என்பதை நாம் அறிந்ததே 


  சுயபோராட்டமான வாழ்க்கை இருந்தாலும் சலிப்படையாமல் போராடிய வெற்றி பெறுவார்கள் 


சுய ஜாதக அமைப்பு படி தொழில் அதிபர்களாக சிலரும் பெரிய இயந்திரங்களை கொண்ட தொழிற்சாலையில் சிலர் பணி புரிபவராகவும் இருப்பார்கள் விடாமுயற்சி கொண்ட இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் போராட்டத்திற்கு பின்பு அக்காரியாத்தில் வெற்றியை அடைந்தே தீருவார்கள் 


வீடு சொத்துக்களில் பிரச்சனை அல்லது கடன் இருக்கும் 


ALP JOTHIDAR MAHALINGAM J

9840290714

6383824552

ALP JOTHIDAR MAHALINGAM

 #மரண பயம் எப்பொழுது ஏற்படும், ,

#அமானுஷ்யங்கள் 


#பயத்தைப் போக்கும் வாழ்வியல் நடைமுறைகள் ..


👉ஒவ்வொரு மனிதருக்கும், வளமான வாழ்வு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே விருப்பம் ..


👉விபத்து கண்டம், மேலிருந்து கீழே விழுதல் ,,எதிரிகளால் தொல்லை, ,கடன் தொல்லையால் அவதி, ,


👉தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய நோயினால் வரும் பெரிய பாதிப்புகள் இவைகளால் ஒரு மனிதருக்கு வாழ்க்கை வெறுமையாகவும் பய உணர்ச்சியும் ஏற்படுகிறது ..


👉ஒருவருக்கு கை கால் முறிவு விபத்து கண்ட முதலானவை ஏற்படும்பொழுது அவர் மட்டுமல்லாது அவரை சுற்றியுள்ள குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்..


ஜோதிடரீதியாக, ,


☀6,, 8 தொடர்புடைய தசா புக்தி காலங்கள் ..


☀மறைவு ஸ்தானங்களில் நின்று ராகு தசை அல்லது கேது தசை நடைபெறும் பொழுதும், ,#kirthika#


☀சுப கிரகமாக இருந்தாலும் குரு அவயோகியாக வந்து ராகு சாரம் பெற்று தசா நடக்கும் பொழுதும், ,


☀சுபர் தொடர்பு இல்லாத சனி தசா ராகு-கேது தொடர்பு ஏற்பட்டு நடக்கும் பொழுதும்


☀செவ்வாய் உச்சம் அல்லது நீச்சம் அடைந்து எவ்வித தொடர்பும் இன்றி இருக்கும்பொழுது விபத்துகளினால் பய உணர்வு ஏற்படுதல்,


☀குறிப்பாக எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் சுபர் தொடர்பு அல்லாமல் வலுவிழந்த நிலையில் பாபகர்த்தாரி யோகத்தில் நின்று தசா நடத்தும் பொழுதும் ஒருவருக்கு மரண பயம் என சொல்லக்கூடிய மேலே கூறிய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது, ,


☀லக்னம் லக்னாதிபதி வலுவிழந்து பாபகர்த்தாரி யோகத்தில் நின்று தசா நடத்தினாலும், ,ஜாதகர் எழுந்திருக்க முடியாத நிலையில், ,நோய்வாய்ப்படுதல் போன்றவை நிகழும், ,#kirthika#

☀தசா நாதனும் புத்தி நாதனும் 6,,8 ஆக அமைந்து ,,லக்ன அவயோகராக வரும்பொழுது மேலிருந்து கீழே விழுதல் ,உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகிறது..


#வாழ்வியல் நடைமுறையில்  சில பரிகாரங்கள் ..


👉லக்னம் லக்னாதிபதி வலு, ,அதன் அதிதேவதை களை முறை யாக வணங்குதல், ,


👉பொதுவாக 6,,8 தசாபுக்தி நடக்கும் பொழுது (அதன் அதிபதி தொடர்பு பெற்ற தசா நடக்கும் பொழுதும்) கூடுமானவரை  புதிய முதலீடுகளை தவிர்த்து, வீண் வம்பு சண்டை வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்வதே சாலச்சிறந்தது ..


👉ராகு கேது தொடர்புடைய தசாபுக்தி காலங்களில் அமானுஷ்யமான எண்ணங்கள் சிந்தனைகள் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் பொழுது, ,முடிந்தவரை கால பைரவ வழிபாடு, ,தெரு நாய்களுக்கு அசைவ உணவுகள் வாங்கித் தருதல், ,அம்பாள் வழிபாடு போன்றவை நன்மை தரும், ,


👉அனைத்திற்கும் மேலாக ஒருவருடைய மரணபயம் ஏற்படும்பொழுது, ,அது ஆயுள் தொடர்புடைய கண்டங்களை உருவாக்கும் பொழுதும், ரத்த தொடர்பு இல்லாதவர்கள் உடைய, பெரியவர்களின் வயதில் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுதல் என்பது, ஒருவருடைய மரண பயத்தை போக்கும் என கூறலாம், ,,


👉மார்க்கண்டேயரின் பெற்றவர்கள், ,எந்த பெரியவர்களை பார்க்கும் பொழுதும் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் பொழுது உன்னுடைய ஆயுள் பலம் கூடும் என கூறியதால், ,மார்க்கண்டேயர் பெற்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் இறைவனை நேரில் நின்று மரண பயத்தை போக்கி காத்தருளியது..


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். 


ALP JOTHIDAR MAHALINGAM J


Saturn +venus = old things

 சனி, சுக்கிரன் இணைவு மற்றும் நேரெதிர் பார்வை :


சனியும் சுக்கிரனும் ஜாதகத்தில்

எந்த இடத்திலும் நெருங்கி இணையவும் கூடாது. நேர்க்கு நேர் பார்க்கவும் கூடாது.


இணைந்தால் ? பார்த்தால் ?


சுக்கிரனின் உயிர் காரகத்துவமும்

ஜட காரகத்துவமும்

பழையது தான் கிடைக்கும்.

ஜாதகருக்கும் பழையது மேல் தான்

ஆர்வமும் இருக்கும்.


உயிர் காரத்துவத்தில் பழையது என்பது

தனக்கு தகுதியில்லாத தகாத உறவு.


ஜட காரகத்துவத்தில் பழையது என்பது

பழைய வீடு

பழைய வண்டி வாகனம்.


சனியும்  சுக்கிரனும் நெருங்கி இணைந்த மற்றும் நேரெதிர் பார்வை பெற்ற  ஜாதகரிடம் ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியாது.


இந்த பதிவை கூட அவர்கள் படிக்கிற நிலையில்  கூட அவர்கள் இருக்கமாட்டார்கள்.

இந்த இணைவு, பார்வை பெற்ற ஜாதகங்களை பார்த்த ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் மட்டுமே இதனின் ஆழம் புரியும்.

ALP JOTHIDAM

 எனது இளைய மகள் ஜாதகம்...தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். அடுத்து +1ல் என்ன குரூப் எடுத்து படிக்க வேண்டும் என்று உடனடியாக form fillup செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்கள். நமது ALP குடும்ப குருமார்களும், சக நண்பர்களும் அவளது future எந்த துறை சார்ந்து இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ற குரூப் தேர்வு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...