சனி, 28 மார்ச், 2020

French Fry

பிரெஞ்ச் பிரை செய்வது எப்படி?

பிரெஞ்ச் பிரை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உருளைக் கிழங்கு உணவு வகை ஆகும். உணவு விடுதிகளில் இதன் விலை அதிகம்.
பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதனை செய்து கொடுத்து அசத்தலாம்.
வீட்டில் எளிதான முறையில் உருளைக்கிழங்கு பிரெஞ்ச் பிரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – ½ கிலோ கிராம்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம் பழம் – 1 (மீடியம் சைஸ்)
எண்ணெய் – தேவையான அளவு (பொரித்தெடுப்பதற்கு)

செய்முறை
முதலில் உருளைக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளவும். எலுமிச்சையை சாறு பிழிந்து கொள்ளவும்.

பிரெஞ்ச் பிரை செய்ய தேவையான பொருட்கள்
பிரெஞ்ச் பிரை செய்ய தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கை படத்தில் காட்டியவாறு விரல்களாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய‌ உருளைக் கிழங்கு துண்டுகள்
நறுக்கிய‌ உருளைக் கிழங்கு துண்டுகள்

நறுக்கிய உருளைக் கிழங்குத் துண்டுகளை நீரில் போடவும். உருளைக் கிழங்குத் துண்டுகள் நீரில் மூழ்குமளவுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கு துண்டுகளை நனைய வைக்கும்போது
உருளைக் கிழங்கு துண்டுகளை நனைய வைக்கும்போது

அதனுடன் தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். இக்கலவையை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து கலவையை சல்லடையில் இட்டு உருளைக்கிழங்குத் துண்டுகளை வடிகட்டிக் கொள்ளவும்.

தண்ணீரை வடிகட்டும் போது
தண்ணீரை வடிகட்டும் போது

இரண்டு நிமிடம் கழித்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் வடித்து வைத்துள்ள உருளைக் கிழங்குத் துண்டுகளைப் போடவும்.

உருளைக் கிழங்கு துண்டுகளை அடுப்பிலிடும் போது
உருளைக் கிழங்கு துண்டுகளை அடுப்பிலிடும் போது

வேகும் உருளைக் கிழங்கு துண்டுகள்
வேகும் உருளைக் கிழங்கு துண்டுகள்

பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான உருளைக்கிழங்கு பிரெஞ்ச் பிரை தயார்.

சுவையான பிரெஞ்ச் பிரை
சுவையான பிரெஞ்ச் பிரை

இதனை தக்காளி சாஸ் உடன் சேர்த்து உண்ணலாம். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பொரித்தெடுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளுடன் மிளகுத் தூளையோ அல்லது மிளகாய்த் தூளையோ கலந்து உண்ணலாம்.
உப்பு தேவையெனில் பொரித்தெடுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும்.

வியாழன், 26 மார்ச், 2020

Sri Kala hasthi Dosam //Yogam

காலசர்ப்ப யோகம்
____________________

நவகிரகங்களில் அதிக வலிமை உடையவர்கள் ராகு ,கேதுக்களே ஆவார்கள்.
நவகிரகங்களில் ஒளிமிகுந்த, கண்ணால் காணக்கூடிய சூரிய ,சந்திரர்களையே கிரகணம் பண்ணக்கூடிய வலிமை இந்த ராகு கேதுக்களுக்கு உண்டு.

இந்த ராகு-கேதுக்கள் தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனையும் தன்னைப் பார்த்த கிரகங்களின் பலனையும் கவர்ந்து  அவர்களின் பலனை எல்லாம் தன்னுடைய தசையில் இவர்களே தருவார்கள்.

இந்த அரவங்கள், தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போலவே செயல்படுவார்கள்...  இந்த காலசர்ப்ப யோகத்தின் ஹீரோக்கள் இந்த ராகு-கேதுக்களேதான்.

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும்  (லக்னம் உள்பட) ராகு கேதுக்குள் அகப்பட்டு கொண்டால் அது காலசர்ப்ப யோகம் ஆகும். நீ யோகத்தில் பிறந்தவர்களுக்கு 32 வயதுக்கு பிறகே யோகம் உண்டாகும்.

இந்த யோகத்தில் அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கிச் சென்றிருந்தால் 32வயதுக்கு மேற்பட்ட
பிறகே யோகத்தையும், அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் தருகிறது. புகழைத் தருகிறது, ஆயுளை தருகிறது .

என்னை பொருத்தவரை ஒரு ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் இருப்பதை நல்லதாகவே கருதுகிறேன். என்ன காரணம் என்றால் இளமையில் கஷ்டப்பட்டு 32 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கையை அடைய இந்த யோகம் காரணமாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு முதலில் நல்ல படிப்பினைகள் வேண்டும். அதற்கப்புறம் செல்வத்தை தர வேண்டும் அப்போதுதான் அந்த செல்வத்தை வைத்து காப்பாற்றுவான்.

பணத்தின் அருமை என்னவென்று தெரியாத ஒருத்தனுக்கு கஷ்டம்னா என்னவென்றால்  என்னவென்று தெரியாத ஒருத்தனுக்கு, சின்னவயதில், இளம் வயதில் ,செல்வத்தை கொடுத்தால் அதை அவன் வைத்து காப்பாற்றத் தெரியாது. ஊதாரித்தனமாக செலவழித்து விடுவான். இந்த யோகம் உள்ளவர்கள் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள். இவர்களின் இளமை காலம் மிகுந்த சோதனையும்  வறுமையும் மிகுந்தது..

இவர் களின் பிற்பகுதி வாழ்க்கையில் அரசர்களைப் போல வாழ்கிறார்கள் அரசாங்கத்திலும் சாதிக்கிறார்கள்.. செல்வ சீமானாக வாழ்கிறார்கள்
என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை..

1979 ம்வருடம் ஏப்ரல் மாதம் 29 ந்தேதி காலை 10 மணிக்கு பிறந்த எனக்கு காலசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் ஆகும். எனக்கு நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றாலும் ராகு கேதுக்குள் அடைபட்டு விட்ட காரணத்தினால் எனக்கு எல்லா நல்லவைகளும் 32 வயதுக்கு பிறகுதான் நடந்தது.

எனக்கு லக்னத்திற்கு இரண்டு எட்டில் ராகு கேதுக்கள் இல்லை. ஒன்று, ஏழில் ராகு கேதுக்கள் இல்லை. சுக்கிரனுடன் ராகு கேதுக்கள் இல்லை. சந்திரனுக்கு 2 ,8 லோ,, ஒன்று எழிலோ ராகு கேதுக்கள் இல்லை..
செவ்வாய் தோஷம் இல்லை. சுக்கிரன் ரொம்பவும் பாதிப்படையவும் இல்லை..2,7,8 ல் பாவிகள் இல்லை.பாவிகள் பார்க்கவும் இல்லை
ஆனாலும் திருமணம் லேட்டாக காரணம் எனது ஜாதகத்தில் உள்ள காலசர்ப்பதோஷம் என்றால் அது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை.

எனக்கு 33 வயதுக்கு பிறகு திருமணம் நடைபெற்று , 35 வயதில் பையன் பிறந்தான்.. இந்த கால சர்ப்ப தோஷத்தில் நான்கு கிரகங்கள் ஆட்சி பெற்றிருந்தாலும், நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் ராகு கேதுக்குள்
அடைபட்டு விட்டால், அகப்பட்டுக் கொண்டால் அந்த ஆட்சி பெற்ற கிரகமும் உச்சம் பெற்ற கிரகங்கள் கூட பலமிழந்து விடும். 32 வயதுக்குப் பிறகே  இது நிவர்த்தி ஆகும்..

சிலர் சொல்லலாம். கால சர்ப்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகத்தில் 32 வயதுக்குப் பிறகு மறுபடியும் மோசமான தசாபுக்திகள் வந்தால் , ஆறுக்கும் எட்டுக்கும் உரிய தசைகள் தொடர்ந்து வந்தால் காலசர்ப்ப யோகம் வேலை செய்யுமா என்று நீங்கள் குறுக்கு கேள்வி  கேட்பீர்களே ஆனால்??

செய்யாது என்று தான் சொல்வேன். ஒரு யோகமான ஜாதகத்தில் நல்ல தசை கள் வாழ்க்கையில் வரவேண்டும் என்ற விதிப்படி இந்த கால சர்ப்ப யோகம் அதுவும் குறிப்பாக கிரகங்கள் ராகுவை நோக்கி சென்றிருக்கும் போது கண்டிப்பாக நல்ல தசைகள் நிச்சயம் வரும். அப்படி வரவில்லை என்றால் அது அவன் கர்மவினை. அதற்கு நாம ஒன்றும் செய்ய முடியாது.

உங்களின் வாதப்படியே "சந்திர அதி யோகம் "இருந்து  யோகத்தை தரக்கூடிய தசைகள் வராவிட்டால் அந்த சந்திர அதி யோகத்தால் என்ன பயன்?? தர்மகர்மாதிபதி யோகம் இருந்து தர்மகர்மாதிபதிகளின் தசை நடைமுறையில் வரவே வராது என்றால் அந்த யோகம் இருந்து என்ன பயன்?
உங்கள் ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் வாங்கி ஹம்ச யோகத்தில் மிக அருமையாக உள்ளநிலையில் குருதசையே வரவில்லை என்றால் "ஹம்சயோகம்" இருந்து என்ன பயன்??
இது காலசர்ப்ப தோசத்திற்கும் பொருந்தும்..

என்னுடைய அனுபவத்தில் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அமைவது நல்லதே..
இளமையில் கஷ்டப்பட்டு படிப்பினைகளைப் பெற்று அனுபவங்களை பெற்று முதுமையில் கடுமையாக உழைத்து முன்னேறி விடுவான்.

Corona Virus


கொரொனா வைரஸ் எதனால் ஏற்பட்டது நவக்கிரக பாதிப்பு ராகு கேது .


பெயர் சொல்ல விரும்பாத ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, வயதான பெரியவர், astrology subject இல் நம்பெருமாள், வழிமுறை கடைபிடித்து, அவருக்கு மனதில்  வரும் தகவல் கொடுப்பவர், கணித்து கூறிய தகவல்.

கொரோனா வைரஸ் ?
ஏன் ? எதனால் ? எப்படி ?
இதற்கான தீர்வு ?
இப்படி பலகேள்விகள்...

காரணமும், தீர்வும்

அமுதம் பெறுவதற்காக பார் கடலை கடைந்தபோது, கயிறாக பயன்பட்ட வாசுகி என்ற பாம்பு,  தன் வலி பொறுக்காது விஷம் கக்கிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் !

இப்பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை வாய்ந்த அவ்விஷம் பரவிடக்கூடாது என்பதற்காக, வினை தீர்க்கும் வித்தன், விடமுண்ட கண்டனானான் !

ஆம் நீச குணமுடைய விஷத்தை நம் ஈசன் பருகிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் !

அன்று வாசுகி கக்கிய அதே நட்சத்திரத்தில், அரவம் ராகு தற்போது  அமர்ந்திருந்து தனது அசுர விஷத்தை  உலகெங்கும் பரப்பி வருகிறது.

இதற்கான முதல் முடிச்சு எப்பொழுது விழுந்தது ?

11.09.2019 அன்று அசுரன் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்று  ராகுவிற்கு ஆறு, எட்டில் கிரகங்கள் இல்லாதிருந்தால் விஷம் கக்கும் நிலை தோன்றியிருக்காது.

நமது போறாத காலம்,  அன்று ராகுவிற்கு  ஆறில் தேவ பிரகஸ்பதி குரு விருச்சிகத்திலும், எட்டில் ராகுவை காட்டிக் கொடுத்த சந்திரன் மகரத்திலும் !

பொதுவாக ஜோதிடம் அறிந்தவர்கள், ஆறு, எட்டு என்பது மறைவு ஸ்தானமாச்சே... ராகுவோடு தொடர்பு பெறாத நிலை தானே என சிந்தனை வரும்.

அப்படியல்ல...

பொதுவாக அசுர குணம் எப்போது வெளிப்படும் ?

எதிரிகளை பார்த்தவுடன் அசுர குணம் ஆர்ப்பரித்து நிற்கும் !

எதிரிகள் யார் ?

தான் அமர்ந்திருக்கும் ஆறு மற்றும் எட்டில் அமர்ந்துள்ள கிரகங்கள் தான் எதிரிகள் !

அதேபோல், அசுர குணம் படைத்த ராகு விஷம் கக்கிய திருவாதிரை  நட்சத்திரத்தில் அமர்ந்தவுடன் பலவானாகி நிற்கிற அச்சமயத்தில், குருவும், சந்திரனும் ஆறு எட்டில் அமர்ந்திருப்பதை பார்க்கிறான்.

ஆஹா தேவர்கள் மறுபடியும் நம்மிடம் மோத பார்க்கிறார்கள் என பெரும் யுத்தத்திற்கு தயாராகிறான். தேவர்கள் என்பது வேறு யாருமல்ல நம்மிடம் உள்ள நல்ல குணம், ஜீவசக்தி !

குரு என்பது நம் ஜீவ சக்தியை பராமரிக்கும் கிரகம் ! சந்திரன் நம் தேகத்தை தாங்கும் கிரகம் !

இரண்டையும் அழிக்க ஆயத்தமாகிறான்... அதற்கான நேரம் வருவதற்காக காத்திருக்கிறான்...

25.12.2019 அன்று  ரோக  காரகரான செவ்வாய் ராகுவிற்கு ஆறில் அதாவது விருச்சிகத்தில் அடியெடுத்து வைக்கிறார். எட்டில் நீர்கிரகமான சுக்கிரன் மகரத்தில். ராகு அமர்ந்திருக்கும் இடமோ காற்று ராசியான மிதுனத்தில் !

அன்று அமாவாசை !  நவகிரகங்களின் தலைவன் சூரியனோ கேது பிடியில், முழு சூரிய கிரகணம் ! சூரியன் மட்டுமல்ல, மற்ற கிரகங்களான குரு, சனி, சந்திரன், புதன் இவையனைத்தும் தனுசு ராசியில் மற்றொரு அரவமான கேது பிடியில் !

ஆம் 25.12. 2019 அன்று மூல நட்சத்திரம் தனுசு ராசியில் 6 கிரகங்கள் !

ராஜ கிரகங்கள் எல்லாம் கேது பிடியில் பலமற்று இருக்க, ராகு என்ற அசுரன்  தன்போரை துவக்கினான்.

எதிர்க்க எவருமின்றி சுற்றி சுழலுகிறான்.

அவனுடைய ஆயுதம் காற்று, நீர் !

அவன் தாக்கும் இடம் தொண்டை (புதன்) ராகு தற்போது  அமர்ந்திருக்கும் இடம் மிதுனம். மிதுனம்  புதனின் வீடு.

அடுத்து, நுரையீரல் ( சனி ) !

அடுத்து ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறன் (செவ்வாய்)

அடுத்து சிறு நீரகம் ( சந்திரன் ) தொடர்ந்து மூளை, ஜீவ சக்தி (குரு) !

ராகு,  நம் மீது தொடுத்த போரில் நேற்று வரை (20.03.2020 ) , உயிரழந்தவர்கள்  எண்ணிக்கை 11,387/-  நபர்கள்.

மனிதர்களாகிய நாம், ராகுவை எதிர்த்து போரிடவில்லை. போரிடவும் இயலாது. ராகுவின் விளைவுகளை மனித மூளை கொண்டு தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். விளைவுகள் அதிகமாகிடாது தடுத்து கொண்டிருக்கிறோம்.

இதற்காக உலக நாட்டின் தலைவர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் மருத்துவ துறையினருக்கும், மற்ற துறையினருக்கும்  நாம் நன்றி  செலுத்த கடமைபட்டுள்ளோம்.

இந்த தடுப்பாட்டத்தில் நாமும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

அரசுகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூறிவரும் விதிகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

அசட்டு தைரியத்தையும், அசட்டு நம்பிக்கையையும் அறவே தவிர்த்து அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும்.

 Social Distance ஐ தற்போது கடைபிடிப்பதே  சாலச்சிறந்தது.

அசுரன் ராகுவிற்கு, நல்லவர் யார் ? தீயவர் யார் என்று தெரியாது.

இன்று 22.03.2020 ல் மகரத்திற்கு வரும் செவ்வாயும், 30.03.2020 அன்று மகரத்திற்கு வரும் குருவும், ராகுவின் உக்கிரத்தை அதிகரிக்க கூடும்.

எனவே, அரசு சொல்வதை அப்படியே கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
அப்படியே கேட்போம். அரவத்தின் விளைவுகளை தவிர்ப்போம்.

சரி எப்போது மாறும் இந்நிலை.

இன்னும் 55 நாட்களுக்கு இந்நிலையை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும்.

அதாவது குரு வக்கிர ஆரம்ப நிலை தான், மாற்றத்தின் ஆரம்பம்.

16.05.2020 அன்று குரு வக்கிர ஆரம்பம்.
வைகாசி 3 ம் தேதி, நவ கிரகங்களின் தலைவன் சூரியனை,  குரு வலிமையோடு தனது பார்வையை செலுத்துகிறார். ஒளி கிரகமான சூரியன், குருவின் அருளால் வலுப்பெற,  இருள் கிரகமான ராகு கட்டுப்பட துவங்கும்.

தொடர்ந்து 20.05.2020 அன்று, ராகு திருவாதிரையில் இருந்து மிருகசீரிடத்திற்கு நகர்கிறார்.

ராகுவின் வீரியம் முற்றிலும் குறையத் துவங்கும்.

கிரக நிலைகளின் படி பாரதத்திற்கு அதிக சேதமிருக்காது. இது ஞானிகள்  வாழும் பூமி.

இன்னும் 55 நாட்கள் எப்படி நகர்த்த இயலும்.

வேறு வழியில்லை.  எளியவர்களுக்கு உதவுவோம். அரசுக்கு ஒத்துழைப்போம்.

அசுரனின் ஆதிக்கம் நிரம்பிய இந்நாட்களில், அசுர உணவான அசைவத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

மனித மூளை, நிச்சயம் விளைவுகளை கட்டுப்படுத்தும்.

இந்த 55 நாட்கள்,  நம்மை நாமே அறிந்து கொள்ள கடவுள் கொடுத்த வரம். இயற்கைக்கு முன்னால் நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நமது அகந்தையை அழிக்கும்.

தவம் இயற்றுங்கள், ஆயுள் காரகன் சனியை பலப்படுத்த மூச்சுபயிற்சி செய்யுங்கள்.

இயலாதவர்கள் சுவாச ஓட்டத்தை மட்டும் கவனியுங்கள். அமைதியும், ஆனந்தமும் பெருகும். ரமண மகரிஷி அளித்த எளிய வழிமுறை இது. முயற்சி செய்யுங்கள்.

சந்திரன் பலம்பெற, ஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகங்களை பாராயணம் செய்யுங்கள் நல்ல பலன் அளிக்கிறது.

அதேபோல, சூரியன் பலம்பெற, ரமணர் அருளிய அருணாச்சல அட்சரமண மாலை படியுங்கள். சித்தர்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

ஆறு, எட்டு ஸ்தானங்கள் தொடர்பு பெறுவது வலிமையான தோஷ நிலை.

இந்நிலையை அறுத்தெரிய, திருவாதிரைக்கு வேதையான திருவோணத்தில்  அவதரித்த, திருவேங்கடவனின், வலது கரத்தில் அமர்ந்துள்ள சுதர்சன சக்கரத்திற்கே அதிக வலிமை !

வீரியம் மிக்க விஷ வைரஸை செயல் இழக்க, ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள்.

நம்மையும், நம் வீட்டையும், நம் நாட்டையும் காக்கும் மிக வலிமையான ஸ்லோகம் இது.

கடுமையான விஷ ஜுரத்திலிருந்து விடுபட சுதர்ஷன மந்திரம்


உலகில் ஏற்பட்டுள்ள கடுமையான கொரோனா நோயிலிருந்து தற்காகத்துகொள்ள நிகமாந்த தேசிகர் அருளிய 
சுதர்ஷன அஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள்

    
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

1.
ப்ரதிபட ஸ்ரேணிபீஷணவரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

2. 
நிகில துஷ்கர்ம கர்ஸநநிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

3. 
ஸூபஜகத்ரூபமண்டநஸூரகணத்ராஸகண்ட 
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷிதபஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 4. 
நிஜபத ப்ரீத ஸத்கணநிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவநிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரணஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

5.
ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜரப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹபடுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டிதபரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


6.புவநநேத்ர த்ரயீமயஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மயநிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமயஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


7.
மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டிதஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பகவிபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

8.
ப்ரதிமுகாலீட பந்துரப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி  மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

9.
தநுஜவிஸ்தார கர்த்தநஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தநபஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரமஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸநஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

10.
த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
 விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
 
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
ஸுத்ரஸநாஷ்டகம்  ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்


அருமையான பரிகாரங்கள்

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...