சனி, 20 ஆகஸ்ட், 2022

ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..

 ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..


காலச்சக்கர தத்துவத்தின் அடிப்படையில் தோஷம் பெற்ற ஒரு கிரகத்தின் தசை or புக்தி நடைபெறும் போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக சில பரிகாரங்களை சொல்கிறோம்...


ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை கொண்டது..அதனால் தான்  ஒவ்வொரு பரிகாரமும் சில வேறுபாடுகளை தம்முள் கொண்டே இருக்கின்றன.


Basic formula எனும் அடிப்படை சூத்திரம் தெரிந்து கொண்டால், நீங்களே நடக்கும் தசா புக்திக்கு ஏற்ற பரிகார முறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்..


எதோ ஒரு கிரகம் உங்கள் ஜாதகத்தில் தசை நடத்துகிறது..தசாநாதன் எந்த ராசி யில் நிற்கின்றார் என்பதை பொறுத்து அந்த ராசிக்கு ஏற்ற பொருட்களை தானம் செய்வதை தேர்வு செய்யுங்கள்.


1. தாது ராசிகள்


மேஷம், கடகம், துலாம்,மகரம்.


பூமியில் இயற்கையாக கிடைக்கின்ற தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள், மற்றும்  இதர தாது பொருட்களை தானம் செய்ய , தோஷம் பெற்ற கிரகத்தின் தசை, சற்று விடுதலை தருகிறது..


உதாரணம்..


சூரியன்..மாணிக்க கல்

சந்திரன்.. முத்து

செவ்வாய்..பவளம்

புதன்..மரகதம்

குரு..புஷ்பராகம்

சுக்கிரன்..வைரம்

சனி..நீலக்கல்

இராகு..கோமேதகம்

கேது..வைடூரியம்


2. மூல ராசிகள்


ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.


நாம் உயிர் வாழ இயற்கை தருகின்ற காய், கனி, மலர்கள், நவதானியங்கள் போன்றவற்றை தானம் செய்ய,  தோஷம் பெற்ற கிரகத்தின் தசை ,சற்று விடுதலை தருகிறது.


உதாரணம்..


சூரியன்..கோதுமை

சந்திரன்..அரிசி

செவ்வாய்..துவரை

புதன்..பச்சை பயிறு

குரு..கொண்டை கடலை

சுக்கிரன்..வெண் மொச்சை

சனி.. எள்ளு

இராகு..கருப்பு உளுந்து

கேது..கொள்ளு


3. ஜீவ ராசிகள்


மிதுனம், கன்னி, தனுசு, மீனம்


பூமியில் உள்ள உயிரினங்களை தானம் செய்யும் யுக்தி. உதாரணமாக கோதானம் எருமை , காளை, சேவல், கோழி, குதிரை, ஆடு போன்ற ஜீவராசிகளை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை சற்று விடுதலை தருகிறது.


உதாரணம்..


சூரியன்.. காளை மாடு

சந்திரன்..வாத்து.

செவ்வாய்..வெள்ளாடு, குதிரை, சேவல்

புதன்..காடை, பசு

குரு..யானை, பசு

சுக்கிரன்..love birds, வெண் குதிரை

சனி..எருமை

இராகு... கருங்கோழி, எருமை

கேது..புறா , செம்மறி ஆடு


4. நெருப்பு ராசிகள்


நவகிரகங்களுக்குரிய உலோகங்களை தானம் செய்யலாம்.


உதாரணம் - 

சூரியன் ..தாமிர பாத்திரம் 

சந்திரன்..ஈய பாத்திரம்

செவ்வாய்..செம்பு பாத்திரம்

புதன்..பித்தளை பாத்திரம்

குரு..தங்க ஆபரணம்

சுக்கிரன்..வெள்ளி பாத்திரம்

சனி..இரும்பு பாத்திரம்

இராகு..இரும்பு பாத்திரம்

கேது...வெண்கல பாத்திரம்


சில உதாரணங்களை பார்ப்போம்..


1. தசாநாதன் சூரியன் மேஷத்தில் நின்று தசை நடத்துகிறார்..


இது தாது ராசி..எனவே சூரியனுக்கு உரிய உலோக தாதுவை தானமாக தர வேண்டும்..அதாவது தாமிர பாத்திரம்..


2. குரு, துலாத்தில் நின்று தசை நடத்துகிறார்..


இது காற்று ராசி..எனவே குருவின் காரக கல்வி, ( tuition ) , உபதேசம் போன்றவை ஏழை குழந்தைகளுக்கு ( குழந்தைகள் .

குருவின் காரகத்துவம் ) தருகின்ற போது கிரக நிவர்த்தி என்பது நிச்சயம்..


3. சந்திரன் மீனத்தில் இருந்து தசை நடத்துகிறார்..


இது நீர் ராசி..சந்திரன் வெண்மை, சந்திரன் நீர், சந்திரன் அரிசி ..இவற்றை இணைத்து மீன்களுக்கு அரிசி சாதம் உணவாக போடலாம்...


மீனத்தில் செவ்வாய் என்றால் , மீனம்... நீர், மீனகளுக்கு துவரம் பருப்பு சாதம் போடலாம்..கட்டாயம் தோஷ நிவர்த்தி உண்டு..


Sambho Mahadev 🙏



 "மகாளய பட்ச அமாவாசை 2022"


09-09-2022 முதல் 24-09-2022, ஆவணி மாதம் 24 தேதி, முதல் புரட்டாசி மாதம் 07 ஆம் தேதி வரை உள்ள 15 நாட்கள் வருகின்ற #மகாளய பட்ச அமாவாசை நாளாகும்.


முதலில் மகாளய பட்சம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்:-


#பட்சம் என்றால் 15 என பொருள், #மகாளயம் மிகப் பெரிய பாக்யம் எனப்படுவது, இந்த 15 தினங்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் மிக சிறப்பு வாய்ந்த அமாவாசை என்று நமக்கு சொல்லி சென்றுள்ளார்கள்.


பித்ரு உலகம் என்று ஒன்று உள்ளது. அதில் தான் நமது பித்ருக்கள் (இறந்தவர்கள்) வாழுமிடம். இந்த மகாளய அமாவாசை தினத்திற்கு மட்டும் தான் நம் இறந்த முன்னோர்கள், நம்மை எல்லாம் காண வருகை தந்து நாம் கொடுக்கும் தர்பண (எள்) த்தைப் பெற்று மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் வழங்கி செல்வார்கள் என்பது ஐதீகமான உண்மையாக புராண வரலாறு கூறுகிறது.


அவ்வாறு அவர்கள் நம் இல்லம் தேடி வந்தவர்களை நாம் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு எள்தர்பணம் கொடுக்காமல் இருந்தோமேயானல் முன்னோர்கள் நம்மீது கோபம் கொண்டு, நமக்கு சாபமிட்டு, மீண்டும் வருத்தத்துடன் பித்ரு உலகைச் சென்று அடைவார்கள். நாம் அவர்களுக்கு எள் தர்பணம் செய்தோமேயனால் அதனை பெற்று மகிச்சியுடன் நம்மை ஆசீர்வதித்து வாழ்த்தி பித்ரு உலகிற்கு சந்தோஷமாக செல்வார்கள். இதுதான் ஐதிகமான உண்மையாகும்.


இந்த மகாளய அமாவாசை 15 நாளும் நாம் நம்முன்னோர்களுக்கும் தாய், தந்தை உறவுகளை இறந்தவர்களுக்கு அவசியம் திதி கொடுக்க வேண்டும். இந்த 15 நாளும் நாம் கொடுக்கும் திதிக்கு உண்டான பலா பலன்களை காண்போம்.


1.#பிரதமை திதி - தன லாபம் கிடைக்கும்.


2.#துவிதியை திதி - குழந்தை பேறு இல்லாதோர்க்கு சந்தான பாக்யம் கிட்டும்.


3.#திருதியை திதி - மனதிற்கு இனங்கிய திருமண வாழ்வு கிடைக்கும்.


4.#சதுர்த்தி திதி - நமக்கு எதிரிகளே இல்லாமல் போய்விடக் கூடும்.


5.#பஞ்சமி திதி - சகல விதமான சம்பத்துக்களும் கிட்டும்.


6.#சஷ்டி திதி - உலகப்புகழ் பெறுவதற்கான வளர்ச்சி உண்டாகும்.


7.#சப்தமி திதி - ஒரு தலைமை பதவி கிட்டும்.


8.#அஷ்டமி திதி - நல்லபுத்தி, ஞானம், அறிவு எல்லாம் தரும்.


9.#நவமி திதி - வாழ்க்கை நல்ல துணை அமையும்.


10.#தசமி திதி - நீண்ட நாள் தடை பட்ட காரியம் நடக்கும்.


11.#ஏகாதசி திதி - கல்வி, கேள்வி, வேத நலம் கிட்டும்.


12.#துவாதசி திதி - நீண்ட நாள் கணவான நகை ஆபரணங்கள் பலன் கிட்டும்.


13.#திரியோதசி திதி - அதீத சக்தி, ஆயுள், ஆரோக்ய மேன்மை தரும். (ஐஸ்வரியம்)


14.#சதுர்த்தசி திதி - துர்மரணங்களால் தொல்லை, பாவம் போன்ற நீங்கும்.


15.#அமாவாசை திதி மேலே சொன்ன அனைத்தும் ஒருங்கே கிடைக்கும்.

 

15 நாளும் காலையில் நாம் செய்தோமேயானல் விஷேச பலன்கள் நம்மை வந்து சேரும்.


இதனை நாம் எளிமையாக வீட்டிலே செய்யலாம்.


தாய், தந்தை இழந்தவர்களின் மகன். கருப்பு எள், தாம்பாளம், ஆசனபலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து சுத்த நீர் கொண்டு பித்ருக்கள் நோக்கி வேண்டி எள் தண்ணீர் இரைத்து சூரிய பகவானை நோக்கி சூரிய காயத்திரி மந்திரம் சொல்லி வணங்கி அந்த எள் தண்ணீரை கால் படாமல் ஊற்றிவிட்டு, பூஜை அறையில் நீங்கள் வழிபாடு செய்து உங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம். இவ்வாறு 15 நாளும் செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது.


இது செய்யும் போது பூஜை அறையில் 7 பொருள்கள் தேவை, அது பால், கங்கைதீர்த்தம், தேன், நெய், வெண்பட்டு கருப்பு எள், காலம் (நேரம்) 11 முதல் 11.30 இதற்கு உண்டான நேரம்.


மகன் இல்லை, மகள் உள்ளார் என்றால் எள் நீர் இரைக்க கூடாது. முன்னோர்களை நினைவு கூர்ந்து, பூஜை அறையில் நெய் வேத்யமாக இனிப்பு, பழம், போன்றவை வைத்து அவர்களை நினைத்து வழிபடலாம். கணவரை இழந்த பெண்கள் எள் நீர் இரைக்களாம்.


குடும்பத்தில் சண்டை, சச்சரவு, திருமண தடை, திருமண முறிவு, துர் மரணங்கள், குழந்தை இன்மை, கடன் தொல்லை, சந்தோசம் இல்லாமை, போன்றவைகள் வருவதற்கு முக்கிய காரணமே. பித்ருக்களின் தோஷமும், சாபமும் தான் இதிலிருந்து விடுபெற வருகின்ற மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருக்களுக்கு எள் தர்பணங்கள் செய்து, ஒருவருக்கு அன்னதானம் செய்து, காகத்திற்கு எள் சாதம் வைத்து பித்ருக்களை வணங்க எல்லாம் வளங்களும் பெற்று சந்தோசமாக வாழலாம் 


நன்றி!

 பரிகாரத்தின் வேர் எங்கே இருக்கின்றது?


உங்கள் ஜாதகத்தில் நடக்கின்ற தசா புக்தி அடிப்படையில், ( அவயோக தசை அல்லது பாதக தசை அல்லது அட்டமாதி பதி தசை etc ) பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எதோ ஒரு தானம் அல்லது பரிகாரம் எனும் மன சமாதானத்திற்காக செய்து கொள்கின்ற நிலையில் இன்று மக்கள் இருக்கின்ற நிலையில் , இந்த பரிகாரம் செய்வதின் logic அல்லது formula என்னவென்று  நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த பதிவு..


1. பரிகாரம் தேர்வு செய்யும் முன்பாக என்னென்ன காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும்? ( The Factors to be considered )


1. ஜாதகத்தில் நடப்பு தசா நாதன் எந்த இராசியில் நிற்கின்றார்?


2. தசாநாதன் நிற்பது 


தாது ராசியா?

மூல ராசியா?

ஜீவ ராசியா?


தாது ராசி என்றால் தங்கம் , வெள்ளி , பித்தளை, ஈயம், இரும்பு என்று தெரியும்?


அப்படியென்றால் அதில் நிற்கும் கிரகம் அடிப்படையில் அது தங்கமா ( குரு எனில் தங்கம், சனி என்றால் இரும்பு ) அல்லது இரும்பா என முடிவு செய்யும் திறன்.


மூல ராசி என்றால் தானியங்கள் என்று தெரியும்...


அப்படியென்றால் அதில் நிற்கின்ற தசா நாதன் குரு என்றால், கொண்டைக் கடலை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..


ஜீவ ராசி என்றால் உயிருள்ள பறவை, விலங்குகள் என்று அர்த்தம்.


அப்படி என்றால் தனுசில் குரு என்றால் பசு என்றும் பகுத்து உணர நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்..


மீனத்தில் குரு என்றால் மீன்களுக்கு ( ஜீவ ராசி ) , கொண்டைகடலை கலந்த சாதம் என்று புரிந்து கொள்ளுங்கள்..


3. தசா நாதன் நிற்பது


நெருப்பு ராசியா?

நில ராசியா?

காற்று ராசியா?

நீர் ராசியா?


4. கால தேச வர்த்தமானம்..


குருவின் காரகத்துவதிற்கு ஏற்ப, வசதி படைத்தவர் என்றால் கோவிலுக்கு யானையை தானமாக வழங்குமாறு  சொல்லலாம்..


அதே சமயத்தில் வந்தவன் ஏழை என்றால் , கோவில் யானைக்கு மஞ்சள் நிற வாழைப் பழம் வழங்க அறிவுரை வழங்கலாம்..


5. இத்துடன் தசாநாதன் நின்ற நட்சத்திர, நாள், ஹோரை,போன்றவற்றிற்கு ஏற்றது போன்று இதனை இன்னும் சற்று அதிக துல்லியமாக நீங்களே கணக்கிட்டு கொள்ள இயலும்..


மொத்தத்தில் கிரக காரகத்துவங்களை அதிகமாக படியுங்கள்..பாவக காரகத்துவ ங்களை இன்னும் அதிகமாக படியுங்கள்..


சர்வேஸ்வரன் நிச்சயம் அருள் புரிவாராக



செவ்வாய், 31 மே, 2022

Kantha shasti kavasam lirics

 துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை.


குறள் வெண்பா

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…


நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக!

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக


ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர

ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க



நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க


எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்


அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு…

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீ எனக் கருள்வாய்

ஈரேழு உலகமும் எனக் குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே

அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா

தனிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகுமாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா திருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணிய

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னரு ளாக


அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

மெத்தமெத்தாக வேலா யுதனார்

சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை  செய்தால்

பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயல்து அருளுவர்


மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்

சூரபத்மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க்கு வந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!

குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!

வெற்றி புனையும் வேலே போற்றி!

உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்



சரணம் சரணம் சரவண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

திங்கள், 2 மே, 2022

60 points

 🌹🌿அட்சய திருதியை எனும் அற்புதம் குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.🌿🌹


🌹 🌿 Akshaya Tritiya 

Tuesday, 3 May🌿🌹


🌹 🌿 அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரித்துள்ளது.🌿🌹


🌹 🌿 அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இதுகுறித்து பலருக்கும் தெரியாது. அட்சய திருதியை எனும் அற்புதம் குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.


🌹 🌿 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது..


🌹 🌿 2.கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.


🌹 🌿 3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.


🌹 🌿 4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.


 🌹 🌿 5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.


🌹 🌿 6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன..


🌹 🌿 7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.


🌹 🌿 8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.


🌹 🌿 9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.


🌹 🌿 10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


🌹 🌿 11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.


🌹 🌿 12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.


🌹 🌿 13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.


🌹🌿14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.


🌹 🌿 15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.


🌹 🌿 16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.


🌹 🌿 17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.


🌹🌿18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.


🌹 🌿 19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.


🌹 🌿 20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.


🌹 🌿 21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.


🌹🌿22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.


🌹 🌿 23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.


🌹 🌿 24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.


🌹 🌿 25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.


🌹🌿26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.


🌹 🌿 27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.


🌹 🌿 28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.


🌹 🌿 29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.


🌹 🌿 30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.


🌹 🌿 31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.


🌹 🌿 32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.


🌹 🌿 33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.


🌹 🌿 34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.


🌹 🌿 35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


🌹 🌿 36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


🌹 🌿 37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.


🌹 🌿 38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.


🌹 🌿 39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.


🌹 🌿 40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.


🌹 🌿 41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.


🌹 🌿 42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.


🌹 🌿 43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.


🌹 🌿 44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.


🌹 🌿 45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.


🌹 🌿 46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.


🌹 🌿 47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.


🌹 🌿 48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.


🌹 🌿 49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.


🌹 🌿 50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.


🌹 🌿 51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.


🌹 🌿 52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.


🌹 🌿 53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.


🌹 🌿 54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.


🌹 🌿 55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.


🌹 🌿 56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.


🌹 🌿 57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.


🌹🌿 58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.


🌹 🌿 59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.


🌹🌿60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

     🙏

வியாழன், 28 ஏப்ரல், 2022

Tanjavur-temple-kalimedu-accident

 ## தஞ்சை தேர் தீ விபத்தின் கிரக தொடர்புகள் ###


தஞ்சாவூர் மிதுனம் ராசி குறிக்கும் ,,,,,


மிதுனம் ராசிக்கு  அட்டமசனி வேறு ஓடிக்கிட்டு இருக்கு,,,


தஞ்சையில் இருந்து விபத்து செய்தி 11பேர் இறப்பு,,என்று வந்து விட்டது,,,


அது தேர் மூலம் விபத்து,,


வாகனம் என்றாலும் தேர் என்றாலும் சுக்ரன் தான்,,,,அதிலும் தேர் என்றாலே அலங்காரம் செய்துதான் வண்டி நகரும் ,,,,


அலங்காரம் சுக்ரன் காரகம்,,


கோட்சார சுக்ரன் கும்ப ராசியில் நிற்கின்றது,,,,


இதனுடன் செவ்வாயும் சேர்க்கை பெற்று  நிற்கிறார்,,, 


செவ்வாய் மின்சாரம் குறிக்கும் ,,


,generator மற்றும் உயர் மின்னலுத்த கம்பி முலம் தேரின் உச்சி யில் தீ பற்றியது,,, விபத்து ஆகியது,,,,,


சுக்ரன் +செவ்வாய் +சந்திரன் இம்மூன்றும் கும்ப ராசி யில் சஞ்சாரம் செய்து கொண்டிருகிறார்கள்,,,


மின்சார விபத்துக்கு தண்ணீரை ஊற்றி இருக்கிறார்கள்,,,


மின்சாரம் செவ்வாய்,,


சந்திரன் மற்றும் சுக்ரன் நீர் கிரகம் 


,,,இம்மூன்றும் ஒரே கட்டத்தில் நிற்க அப்போ தண்ணீரை தான் ஊற்றி ஆக வேண்டும்  வேறு வழியில்லை,,,,அதன்மூலம் இறப்பு,, சேதம்,,,


விபத்து நடந்தது களி மேடு என்ற ஊரில் ,,,,


,களி என்றால் மகிழ்ச்சி என்று பொருள்,, மகிழ்ச்சி என்றால் புதன் காரகம் ,,தஞ்சை களிமேடு மிதுனம் ராசி,, மிதுன அதிபர் புதன்,,,


 மேடு என்றால் உயரம்,


புதன் பகவான் 


அவர் கார்த்திகை சாரம் பெற்று ரிஷபத்தில், சஞ்சாரம் செய்கிறார்,,,


கார்த்திகை என்பது , சூரியன் நட்சத்திரம்,, ஆகும்,,


 சூரியன் என்றால் மலை,, மேடு,,உயரம்,,என பொருள்,,


 புதனுக்கு சாரம் கொடுத்த சூரியன் மேஷம் எனும் மலையின் மேட்டில் உச்சம்,,,


ஆக களி மேடு புதன் நிற்கும் கார்த்திகை சாரம்,,


 தஞ்சை மிதுனம்,,குறிக்கும்,,


 மிதுன அருகில் இருக்கும் ராசி ரிஷபம்,,,,


 தஞ்சை அருகே இருக்கும் ஊர் களிமேடு ,,


கும்பத்தில் இருக்கும் செவ்வாய் 4ஆம் பார்வையாக மிதுனராசி அதிபதி புதனை பார்த்து விட்டதால்  தீவிபத்து,,


அவ்வூரில் அப்பர் கோவில் தேர் விழா,,, அப்பர்,,,,means தந்தை ,அப்பா,, தலைவன்,, சூரியன் காரகம்,,


மேடு என்றால் மலை காரகம் உயரம்,, காரகம்,, சூரியன் கோட்சரத்தில் மேஷத்தில் உச்சம்+ராகு 


ராகு கண்டம் கொடுப்பவர் அல்லவா,,


சூரியன் மேஷம் எனும் தலை ராசியில் நிற்க தேர் தலை உச்சியில் மின்சாரம் பாய்ச்சியது,,


சூரியன்+ராகு மேஷம் எனும் நெருப்பு ராசியில் ,,இருக்கிறார் கள்,,நெருப்பை காட்டிதான் ஆகவேண்டும்,,,


செவ்வாய் ,,,சதய நட்சத்திர,ராகு சாரம்,,

ராகு ,,,செவ்வாய் வீடு,,,


செவ்வாய் ராகு தொடர்ப்பு என்பது காட்டான் குறிக்கும்,,


வண்டி சக்கரம் நேராக திரும்பாமல் இருப்பதை பார்த்த பின்னரும் காட்டுத்தனமாக தேரை இழுத்து இருக்கிரார்கள்,,,,


 வண்டி ரோட்டு ஓரத்தில் வந்ததும் ,மின்சாரம் வயரில் பட்டு விபத்து,,


ரோடு ஓரம் என்றால் சனி+ செவ்வாய்,,,,


blacktop road சனி 


மண் ரொடு செவ்வாய்,,


 செவ்வாய்+ சனி நெருப்பு விபத்து,,குண்டுவெடி,, இது போன்று,,


சனி நிற்பதோ செவ்வாயின் அவிட்டம் சாரத்தில்,, ஆக ரோட்டு ஓரம் விபத்து,,


சனி கும்பம் நெருங்கியதால் தேர் விபத்து,,,


சனி கும்பத்தினுள் entry ஆகி விட்டால் கோபுரத்துதுக்கே ஆபத்து,,,,,


உலக இயல்,,உலகில் அனைத்தும் கிரகங்கள் தான் இயக்குகிறது,,, நம்மையும் தான்,,,நாமும் சரி இந்த பூமி உருண்டையும் சரி கிரகங்களுக்கு ஒரு விளையாட்டு பொருள்,,,


தமிழ் வேந்தன் என்ற

நண்பர் ஒருவர் விபத்துக்கு  காரணம் என்ன என்று கேட்க  பிறந்த பதிவு,,,


மற்றும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை தீ விபத்துக்கு காரணம் கேட்டிருந்தார்,, ,


,சென்னை தலை நகரம் ,,,


தலை என்றால் மேஷம்,,


 அதில் அஸ்வினியில் உச்சம் சூரியன்,,


 சூரியன் என்றால் மருத்துவர்,,,


 அவர் வாங்கிய சாரம் அஸ்வினி,,இது கேது சாரம்,,,


 கேது என்றால் மருத்துவ மனை,,இங்கேயும் அதே 


ஓம் நமசிவாய 


சதிஷ் குமார்

Star temples-cgepa

 இது மிக. மிக முக்கியமான பதிவு இதை சேமித்து வைத்து கொள்ளுங்கள் .  


நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................  


உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?   எப்படி செல்ல வேண்டும்?   அங்கு சென்றால் கிடைக்கும்  பலன் என்ன! ...............  #அசுவினி:  

கோயில்: 

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்  

அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள். சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.  இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ., திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8. போன்: 94438 85316, 04369 222 392 

 #பரணி: 

 கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் அம்மன்: சுந்தரநாயகி  தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது.  சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.  இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை.  திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30. போன்: 94866 31196, 04364 285 341  

#கார்த்திகை:  

கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.  சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும். இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5 போன்: 94874 43351, 04364 282 853.  

#ரோகிணி:  

கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில் தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார். சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.  இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை. திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30. போன்: 044- 2723 1899.  

#மிருகசீரிஷம்:  

கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில் தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.  சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.  இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண். திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7. போன்: 94433 51528, 04366- 269 965.  

#திருவாதிரை:  

கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில் அம்மன்: சுந்தரநாயகி அம்மன் தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.  சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.  இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம். திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30. போன்: 99440 82313, 94435 86451.

  #புனர்பூசம்:  

கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது. சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.  இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில். திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7. போன்: 99941 07395, 04174 226 652 

 #பூசம்: 

 கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்  அம்மன்: அபிவிருத்தி நாயகி தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார். சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும்.  இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில். திறக்கும்நேரம்: மாலை4- இரவு7.  போன்: 97507 84944, 96266 85051.  

#ஆயில்யம்:  

கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும்.  சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.  இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7. போன்: 99940 15871, 0435- 200 0240

  #மகம்:  

கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில் அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.  சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.  இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில். திறக்கும் நேரம்: காலை6- மாலை6. போன்: 95782 11659, 93624 05382

.  #பூரம்:  

கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது. சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர். இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ. திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30 போன்: 98651 56430, 99652 11768  

#உத்திரம்:  

கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில் அம்மன்: மங்களாம்பிகை தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.  சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர். இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8. போன்: 98439 51363, 0431- 254 4070.  #அஸ்தம்:  கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில் அம்மன்: அன்னபூரணி தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.  சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு. இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல். திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30. போன்: 95002 84866  #

சித்திரை:  

கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி  தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.  சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.  இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6. போன்: 94439 61948, 97902 95795.  

#சுவாதி:  

கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில் அம்மன்: பூங்குழலி தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி. சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.  இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7 போன்: 93643 48700, 9382684485.  #விசாகம்:  கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில் தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.  சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.  இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.  திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30. போன்: 04633- 237 131, 237 343.  

#அனுஷம்:  

கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்  அம்மன்: உலகநாயகி தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.  சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.  இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8. போன்: 04364- 320 520   

#கேட்டை:  

கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில் தாயார்: பெருந்தேவி தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.  சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு. இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ., திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30. போன்: 97903 42581, 94436 50920  #மூலம்:  கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் அம்மன்: புஷ்பகுஜாம்பாள் தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார். சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.  இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30. போன்: 94447 70579, 94432 25093  

#பூராடம்:  

கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில் அம்மன்: மங்களாம்பிகை தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.  சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும். இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1. போன்: 94434 47826, 96267 65472  #உத்திராடம்:  கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில் அம்மன்: மீனாட்சியம்மன் தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.  சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.  இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,  திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8 போன்: 99436 59071, 99466 59072  #திருவோணம்:  கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில் தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார் தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.  சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.  இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.  திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30 போன்: 94868 77896,04177 254 929  

#அவிட்டம்:  

கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் அம்மன்: புஷ்பவல்லி தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது. சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும். இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6 போன்: 98658 04862, 94436 78579  

#சதயம்:  

கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் அம்மன்: கருந்தார் குழலி தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.  சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும். இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9 போன்: 04366 236 970  

#பூரட்டாதி:  

கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்  அம்மன்: காமாட்சி தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.  சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும். இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7 போன்: 94439 70397, 97150 37810  #

உத்திரட்டாதி:  

கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'.  சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.  இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,  திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12 போன்: 99652 11768, 04371-239 212  #

ரேவதி:  

கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.  சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.  இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ., திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை  5- இரவு8 போன்: 97518 94339, 94423 58146

வியாழன், 24 மார்ச், 2022

Ravindra Jadeja birth date & Time

 In the horoscope of famous all rounder 

Ravindra Jadeja 




who plays for the Indian cricket team and Deccan Chargers in IPL, Lagna lord Saturn is well placed in labhasthana 11th house, 10th lord of profession Mars well placed in the dhanasthana 2nd house, 2nd lord Jupiter well placed in the 4th house and forming a powerful rajayoga in in mutual aspect with Sun and Mercury in the 10th house, the 6th lord of sports and competition Moon powerfully placed in the bhagyasthana 9th along with Bhagyadhipati Venus and RahuKetu are well placed in the lagna/saptama.

புதன், 23 மார்ச், 2022

Guru

 ### மஞ்சள் ###


பெரிய பணத்தொகையை மஞ்சள் பையில் தான் பெரும்பாலும் எடுத்து செல்வோம்,,,


வேற்று நிற பையில் அவ்வளவாக கொண்டு செல்லவும் மாட்டோம்,,


ஒரு bank சென்று பணத்தை எடுத்தால் கூட மஞ்சள் பையில் தான் எடுத்து வருகிறோம்,,,,


குரு பெரிய பணத் தொகை சொல்லும்,,,


குரு பெரிய வருமானம்,, தர கூடிய தன காரகன்,,,,


பீரோலில் பெரிய பணத் தொகையை மஞ்சள் பயில் கட்டி பத்திரமாக வைப்பதே நலம்,,,


 மஞ்சள் துணி விரிப்பு விரித்து பணத்தை அதன் மேல் வைக்க நலம்,,,,,


Small scale industries என்றாலும் பெரிய தொழில் நடத்துபவர் என்றாலும்,,,


வருஷத்துக்கு இவ்வளவு turn over ஆகிருக்கு என்று கூட சொல்வார்கள்,,, இது குருதான் சொல்ல வைக்கும்,,, வருடா வருடம் பெயர்ச்சி ஆகும் கிரகம் குரு,,,,


மஞ்சள் நிறம் பீரோலில் இருக்கட்டும்,,


பெரிய பணம் என்றால் வீட்டில் மட்டும் இல்லை நாட்டுக்கும் தான்,,, 


குரு ஒரு கருவூலம்,,,


குரு ஒரு பொதுபணம்,,,,


INcomtax raid வந்தால் கூட மூடை மூடையாக இடம் மாற்றுவார்கள்,,, இடம் மாற்றம் குறிக்கும் கிரகம் குரு,,,,


மஞ்சள் நிறம் நமக்கு எப்போதும் தேவை,,,


சொத்து பத்திரங்கள் வீடு, நில, பத்திரங்கள் certificates அதாவது ஆவணங்கள் வைப்பதுக்கும் மஞ்சள் பை சிறப்பு,,, ((குரு+புதன்=வங்கி,,,,சிறந்த மூளை))


இந்த மஞ்சள் பையில்,,யார் பெயரும் அச்சிடாமல் இருக்க நலம்,,,அதில் ஏதோ ஒரு பெண் தெய்வம் இருந்தால் போதும்,,,,அந்த பெண் தெய்வம் கண்மாய்,, ஆற்று ஓரங்களில் இருக்கும் அம்மன் கோவில் பெயர் எனில் சிறப்பு,,,


மஞ்சள் நிற பையில் மாமிசம் ஒரு போதும் வாங்கி வர கூடாது,,இந்த பெரிய தவறை ஒருபோதும் செய்ய கூடாது,,,,,


இயன்றால் முயற்சி செய்யவும்,,


ஓங் நமோ குரு தேவ் நமோ,,,


சதிஷ் குமார்

வெள்ளி, 11 மார்ச், 2022

Manthiram siddhar

 வசிய மந்திரங்கள் - வசிய வசிய வசி ,


 சகல வசியம் 

🌹🌹🌹🌹🌹🌹🌹

பல்வேறு முறை 

அனைத்து சித்தர்களுக்கும் நன்றி 

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற 

தொடர்பு கொள்க 

ஜோதிடர் திவ்யபாரதி 

தொலைபேசி எண் 

+917010389042

வாட்ஸ்அப் எண் 

+919578053581


நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.


மந்திரம்


ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.


பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.

பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.


முக வசியம் பெற ரகசிய முறை'


வெள்ளெருக்கங்குச்சி ,ஆலவிழுது ,வேலங்குச்சி இவற்றில் ஏதாவதொன்றில் பல்துலக்கி வெந்நீரில் முகம் கழுவிவர நம் முகத்தை அனைவருக்கும்பிடிக்கும்.

🌷🌷🌷

முக வசீகரம் உண்டாக மந்திரம்

இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.

மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.

கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.

பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி

🌹🌹🌹🌹🌹

வசீகரிக்க

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக

வழிமுறை !!!

-----------------------------------------

"வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி

சகலரும் வசி" என 108 முறை கண்ணாடியில்்

உங்க முகத்தை பார்த்தபடி

சொல்லுங்க.அன்றைய நாளில் இன்னும்

கூடுதல் அதிர்ஷ்டமா இருக்குமாம்

*

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக

வழிமுறை:-

நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில்

அல்லது வேலை பார்க்கிறீர்களா?

இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல்

பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்

டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்

வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிப

ுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள்,

இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்

துறையில் இருந்தாலும் சரி! எல்லோரையும்

வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி

இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள்

செய்ய வேண்டும்.தினமும்

காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.

(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும்

பரவாயில்லை.தொடரலாம்)

ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு

விரிப்பின் மீது நின்று அல்லது

அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை

உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4

திசைகளையும் நோக்கி தலா 108 முறை

ஜபிக்க வேண்டும்.

ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு

கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில்

ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்க

க்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட

வேண்டும்.

துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே

குடிக்கவேண்டும்.

(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில்

பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள்

அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவி

ட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்)

91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில்

நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.

இது 90 நாளுக்குமேல் தான்

செயல்படத்துவங்கும்.

ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது

கோடான கோடி நன்றிகள்

முக வசியம் உண்டாக மந்திரம் !

------------------------------

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம்

உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன்

கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய

முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்

-------

ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம்

திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம்

காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி

என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும்

லட்சுமணரும் போலே அம்மா தாயே

லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே

சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர

அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து

பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே

சுவாகா.

பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து

சித்திசெய்து கொள்ளவும்.

பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம்

சொல்லி விபூதி சாத்தவும்.

இராஜ வசிய மந்திரம்

----------------------

வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட

பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,

துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு

செபிக்க ராஜவசியம் உண்டாகும்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என

அரசு சார்ந்தவர்களிடம்

வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள் :-

-----------------------------------------

வசி வசி என்று தினம் செபித்தாயானால்

மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும்்

என்றார்கள் நம் சித்தர்கள்.

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய

சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம்

ஆட்டி படைக்கிறது என்று பார்ப்போம்.

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில்

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது,

கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற

பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ்

கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக

முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான

தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை

அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான்

வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம்.

சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர்

வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம்,

பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று

ஆறு வகையாக பிரித்துள்ளனர்.

உலகம், பகைவர் மற்றும் விலங்கு

வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும்,

அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற

அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர்

வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும்

பயன்படுத்தி உள்ளனர்.

வசியத்தை நடைமுறை வாழ்க்கையில்

பயன்படுத்தும் பொழுது

1 . மந்திரம்

2 . யந்திரம் அல்லது சக்கரம்.

3 . மூலிகை

4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு

நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி

இவைகளை பற்றி ஆராய்வோம்.

 #‎மந்திரம்  :-

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட

மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே

மந்திரம் எனப்படும்.

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும்

அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய

முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர

எழுத்துகளுக்கு உண்டு.

🌷🌷🌷🙏🏻 நமது சித்தர்களும் நமசிவாய என்ற

ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின்

ரகசியங்களும் அடங்கி இருந்ததை

அறிந்திருந்தார்கள்.

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன்

என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி

அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும்

பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது

வசியதிற்கான முலமந்திரமாகும்.

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை

ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை

செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள்

சித்தர்கள்.

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.

உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம்

இந்திரன்.

வசிய ஆற்றலைத்தான் இன்றைய விஞ்ஞானம்

மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை

படுத்தி படிக்கும் போது நமது உடலில்

மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும்.

இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று

குறிப்பிடுவார்கள்.

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை

எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம்

தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின்

மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட

காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது

யந்திர முறையாகும்.

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22

வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால்

செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம்

அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால்

ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள்

பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம்

வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.

இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை

மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது

கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று

லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும்.

இது ஒரு முறை.


🌷🙏🏻🌷

 எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும்

மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன.

இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற

நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர

முறையாகும்.

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று

வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே

நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால்

எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும்

தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின்

பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி

நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது

போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை

சிதற விட மாட்டார்கள்.

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

முறையாக உருவேற்றபடாத எந்த

சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

🍁🍁🍁🍁🍁

 வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.


மந்திரம் 


அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா. 


கிரிகை


சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்


சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம் 

வணக்கம்,


மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.


நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.


மந்திரம்


ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல ் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா. 


கிரிகை


உரு 108 


நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்

 

 

                          அஞ்சனாதேவி மூல மந்திரம்

 

 

மந்திரம் 1ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா


 மந்திரம் 2


ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா


மந்திரம் 3


ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.


இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன

 

 

 

முக வசியம்  அல்லது  சர்வசன  வசியம்


  இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.


மந்திரம்.


ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து  சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா.

🌹🌷🙏🏻🍁🌺💐

ஆகவே தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தும் காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை

🌹🌹🌹🌹🌹🌹


 குருவருளை வேண்டி அவரின் மேலான அனுமதியுடன் ஒரு ஞாயிற்று கிழமை நாளில் நீராடி, செம்பட்டு ஆடை அணிந்து வடகிழக்கு திசையை நோக்கி வில்வ மரத்தினாலான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, முன்னால் செம்பட்டிலான துணியில் யந்திரத்தை வைத்து; வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.

🌷🌷🌷🌷🌷


 கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டும்..


வசி வசி..வசி..

சகலமும் வசி...

சர்வமும் வசி..

சகலரும் வசி...


108 முறை இதனை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புவேன் என்றார்..என் நண்பர்கள் யாருக்கேனும் இது பயன்பட்டால் அதை விட சந்தோசம் எனக்கு எதுவும் இல்லை!!


உண்மையில் ஒருவருக்கு நிறைய மக்கள் செல்வாக்கு உண்டாகவேண்டுமெனில் மக்கள் தொடர்பு ஸ்தானமான 9ஆம் இடத்தில் லக்னத்துக்கு சுபர் அல்லது இயற்கை சுபர் இருக்க வேண்டும்...அவரது திசாபுத்தி நடக்க வேண்டும் அல்லது நான்காம் அதிபதி திசையோ ஐந்தாம் அதிபதி திசையோ நடக்க வேண்டும்..அந்த காலத்தில் அவர் தன் வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடுகிறார்...லக்னத்துக்கு நான்காம் இடம் சுகாதிபதி..அவர் திசை நடக்கும்போது தம்பி பணக்காரர் ஆகிவிடுகிறார் ..மாமனார் செல்வாக்கு பெறுகிறார் ...ஜாதகரும் சொந்த வீடு கட்டிவிடுகிறார்...அல்லது மாமனாராவது சொந்த வீடு கட்டி கொடுத்து விடுவார்..பாக்யாதிபதி திசை நடக்கும்போது தந்தை இருந்தால் தந்தையால் செல்வம் வந்து சேரும்..அல்லது திடீரென புகழ் பெற்று ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிடுகிறார்..


நான் பார்த்த புரோகிதருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருந்தது....சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில்.மிதுன லக்னம் வேறு..பாவகிரக தொடர்பும் இல்லை..அம்சத்திலும் கெடவில்லை..சுக்கிரன் நின்ற வீட்டுக்கதிபதி சனி 2ஆம் பாவகத்தில்...பேசியே ..அல்லது மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்..


ஒரு ஜாதகத்தில் லக்னம் ,ராசி,ராசி அதிபதி கெடாமல் இருந்தாலே போதும் அவர் யோகமான ஜாதகர் ஆகிவிடுகிறார்..சனி வலுத்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் அவர் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறார்...ஆட்சி,உச்சம் பாவர்கள் அடைய கூடாது..லக்னத்துக்கு யோகர் மறைய கூடாது..லக்னத்துக்கு பாவர் பலம் பெற கூடாது...எதிரிகளுடன் போராடவே நேரம் சரியாக இருக்கும்.7ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எல்லாம் மனைவி பார்த்துப்பார் என வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.. அஷ்டம சனி,ஏழரை சனி எது வந்தாலும் திசை எது நடக்கிறது என்பதுதான் முக்கியம்..மோசமான திசை நடந்தாலும் சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி ஓஹோ என இருந்தாலும்...முடியல சாமி..குரு என்னத்த கொடுத்தார் என புலம்புவதாக இருக்கும்!!


🌷🙏🏻🙏🏻🌷

 வசியம் வேண்டுபவர்கள் அகத்தியர் வாத சௌமிய சாகரத்தில் மந்திவாள் பகுதியில் குறிப்பிட்டுள்ள " 


ஓம் ரீங் வசி வசி" 


என்னும் மந்திரத்தை கண்களை முடி,உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும். 


தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும். 


தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்த டனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். மேலும் வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.ஆனால் எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது. 


ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிவிட வேண்டும்.இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும். 

வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள். எதிரிகளின் எதிர்ப்பு அலைகளை மாற்ற நம் வசீகர சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். 


எந்த மந்திரமானாலும் எடுத்த உடனேயே பலனைத்தராது. மிகவும் கவனத்துடன் மந்திரத்தின் ஒலி மாறாமல் சிந்தனையை மந்திரத்தில் மட்டும் செலுத்தி இலட்சம் உரு ஏற்றினால் மந்திரம் சித்தியாகும்.

🍁🍁🍁


 வசிய மந்திர இரகசியங்கள்


மோகினி மந்திரம்


ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா 


மூல மந்திரம்


ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா


(பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்)

 

 

 

இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.


 குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.


மந்திரம்


ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா    


  

கிரிகை


சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை

🌺🌺🌺

 அகத்தியர்.

– அகத்திய வாத சௌமியம் — 

எங்காவது வெளியில் கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும்.குறிப்பாக இன்டர் வியூ,பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பின்பற்றவும்.

ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |


செந்தாமரையில் பிறந்திடும் மருவே|


உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|


கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

🌷🌷🌷

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம்

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,

பிரணவ வாலை , அகார - உகார - மகார , 

ஸ்திரி , ஸ்ரீம், ஐம், மனோன் மணி ,

ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,

சர்வ ஜீவ வசிகரி ,

சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,

சர்வ சகல வசி, வசி, ராஜ மோக வசி ,

சர்வ லோக , சர்வ புவன ,

ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,

பிரணவ வசிய வசி ,

எந்தனைக் கண்டோர், உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,

மாத்தான், வஞ்சகர் வந்து வணங்கிட ,

என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,

ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,

வசிய வசிய வசி ,

ஓம் குருவே நமசிவய சுவாஹா.

🌹🌹🌹

 வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும். மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.  முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.


108முறை கூற வேண்டிய மந்திரம் :


ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ🙏🏻🙏🏻🙏🏻நன்றி வணக்கம்

Avadi darbar

 

https://m.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ https://m.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ

புதன், 2 மார்ச், 2022

Murugan

 #### செவ்வாய் நீசம் #### என்ன செய்வது நண்பரே,,,? செவ்வாய் பலம் பெற என்ன செய்யலாம்,, எதை பின்பற்றலாம்,,,??


அதாவது செவ்வாய் பல குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தவிர்ப்பது?என்று கேட்பதே உத்தமம்,,,


செவ்வாய் அசையா சொத்து,,,


இளைய உடன் பிறப்பு ,,,


ரத்தம்,,, வீரம் ,,,,வீரியம்,,


இதற்க்கெல்லாம் அதிபர்,,,,,ஆவார்,,,


"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"என்பது பழமொழி அந்த இளைய தம்பி செவ்வாய் தான்,,


செவ்வாய் பகவான் நீசம் எனில் செவ்வாய் சுத்தமாக பலமின்மை என பொருள்,,அல்ல,,,


சகோதர உறவுகள் நமக்கு உதவி செய்யும் இடத்தில் இல்லை,,, 


அதாவது நமக்கு உதவி செய்யும் சூழலில் இருக்க மாட்டார்கள்,, 


இளைய உடன்பிறப்புக்கு 

சிறு பொருளாதார தேக்கம் இருக்கும்,,,அவ்வளவே,,


 மற்றும் 3ஆம் அதிபர் மற்றும் 3ஆம் வீட்டில் உள்ள கிரகம் லகனத்துக்கு ஏதுவாக இருப்பின் இளைய உடன்பிறப்பு நல்லாவே இருப்பார்,, நமக்கும் உதவி செய்வார்,,


இதே போல செவ்வாய் நீசம் வீர்ய காரகன் நீசம் ,,,,இது தாம்பத்ய துக்கு சுகமில்லை என்றும் சொல்லல் ஆகாது,


,3ஆம் வீட்டு அதிபர் மற்றும் 3ஆம் வீட்டில் உள்ள கிரகம் நல்ல நிலையில் இருந்தால் நலமே,,,


அதிலும் செவ்வாய் கடக கட்டத்தில் ஆயில்யம் சாரத்தில் மட்டுமே நீசம் ஒழிய,,,புனர்பூசம், பூசம், சாரத்தில் நின்றால் நீசம் அல்ல,,


 கடக கட்டத்தில் செவ்வாய் இருந்தாலே செவ்வாய் நீசம் அது பல(மி)னில்லை என கொள்ள வேண்டாம்,,,,


செவ்வாய் ஆயில்யத்திலேயே  நீசம் ஆனாலும் ,,உங்களுக்கு வீடு ,நிலம், கிடைக்காது,, பெண்ணுக்கு கணவன் நிலைக்க மாட்டான்,, வீரிய பற்றாக்குறை ஆகிவிடும் என்று சொன்னால்


பலன் தவறாகிவிடும்,,,


நீச கிரகதிற்கு காலம் செலவு செய்து கணிப்பது நன்று இல்லை எனில் பலன் தவறாகும்,,,,,


செவ்வாய் நீசமே ஆகினும் செவ்வாயின் அனுக்கிரகம் பெற முடியும்,,,தான் 


கீழ் கூறப்பட்டவை 


இயல்பாகவே பின்பற்றிய வர்க்கம் தான் நம் வர்க்கம்,, 


இதை மீண்டும் நாம் தொடர்ந்தால் செவ்வாய் நமக்கு நீச பலனை கொடுப்பதும் இல்லை,,


பெண்களுக்கு செவ்வாய் நீசம் ஆகி இருந்தால்,,,,


 தலை முடியை நன்றாக நடு வகிடு எடுக்க வேண்டும்,,


நெற்றியில் நல்ல தரமான குங்கும பொட்டு பெரிதாக வைக்க வேண்டும்,,ஸ்டிக்கர் பொட்டு ஆகாது,,


புருவ முடிகளை சிரைக்கவோ பிடுங்கவோ கூடாது,,, (இயன்றால் புருவ முடிகளுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து அடர்த்தியாக வளர்த்து வரவேண்டும்,,,,)


வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை என்றால் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்,,


வீட்டில் நன்றாக தீபம் பொறுத்த வேண்டும்,,


 வாழ்வரசியாகிய பெண் தினமும் தலையில் பூசூடி (மல்லிகை) கொள்ள வேண்டும்,,,தலை,முடிகளை பேய் போல பறக்க விட கூடாது,,,


ராஜ அலங்காரத்தில் முருகன் புகைப்படம் பூஜை அறையில் நிறுத்த வேண்டும்,,


சமையல் அறை தான் தெய்வம் என எண்ணி ரொம்ப சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,,,,


வீட்டுக்கு வந்த பெண்களுக்கு குங்குமம் மற்றும் குடிக்க  தண்ணீர் கொடுக்க வேண்டும்,,,


 துவரம் பருப்பு சாம்பார்,,,துவரை சட்னி,,,,


 பீட்ருட்,, தர்பூசனி,,சிகப்பு தண்டு கீரை,,


 அரைக்கீரை,, தண்டுக்கீரை ,,எல்லா கீரையும்,,,மற்றும்


 (செவ்வாழை+தேன்)


 மாதுளை பேரீட்சை குதிரைவாலி அரிசி கஞ்சி,,


இவை எல்லாம் தினமும் ஏதாவது உண்ண வேண்டும் ,,,,


தினமும் உண்ணுகிறோமோ இல்லையோ செவ்வாய் கிழமை இதில் ஏதேனும் ஒன்றை உள்ளே தள்ளி விடவும்,,


ஆட்டுக்கு பிடித்தது அகத்திகீரை அதை உண்ணுவதும் செவ்வாய் பலமே,,


வருடம் ஒரு முறையாவது ரத்தம் தானம் செய்வது சிறப்பு,,


செவ்வாய் பலகுறைவு எனில் திருஸ்டி எளிதில் விழும்,,,,,


 இந்த திருஷ்டி மூலமே ஒருவகையான பொருளாதார தேக்கம் உண்டு தான்,,,


 சரியாக வெள்ளி, செவ்வ்வாய்க்கு திருஸ்ட்டி எடுப்பதும் நலமே,,,


அதன் மூலம் பொருலாதார தேக்கம் மாற்றம் அடையும்,,


மற்றும்


 உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்தல் அவசியம்,,,,,


முரட்டு தனமான உடற்பயிற்சி யாராக இருந்தாலும் தவிர்க்கவும்,,


செவ்வாய் உச்சம் ஆகும் வீடு மகரம் இது கால் முட்டிகளை குறிக்கும் ,,,,


இந்த கால் மூட்டுக்கு சிறு சிறு பயிற்சி,, சின்ன மெதுநடை,, போதும்,,,முட்டிகள் வலு குறைந்தால் செவ்வாய் சார்ந்த காரக பிரச்சனைகளில் போராட முடியாது,,,,


கால்பயிற்சி கை பயிற்சி என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுதிருக்கோவில் trust மூலம் சொல்லி கொடுத்து சென்றிருக்கிறார்,, அதை எல்லாம் நாம் பயன்படுத்துவது நல்லது,,,


 செவ்வாய் வலு குறைவு எனில் முதலில் உடலில் தான் அதை சீர் செய்ய வேண்டும்,,


செவ்வாய் அங்காரகன் அங்க காரகன்,,அங்கம் என்றால் உடல்,,


கால புருஷனின் வீரிய காரகன் செவ்வாய்,, வீரிய ஸ்தான அதிபர்,, 


வீரிய ஸ்தானம் என்பது முயற்சி ஸ்தானம் மட்டும் அல்ல உடற்பயிற்சி ஸ்தானமும் கூட,,,


,, உடலை செழுமையாக வைத்து கொண்டால் போதும்,,,செவ்வாய் நீச பலனை தராது,,,,


உடல் ஆரோக்கியம் இருந்தால் உழைத்துக்கொள்ளலாம் அதன் மூலம் சொத்துக்கள் வாங்கி கொள்ளலாமே,, வருடம் ஒருமுறை மலைக்கோயில் சென்றுவருவதும் கந்த சஷ்டி படிப்பதும் கேட்பதும் நலம்,,,,


இந்த பதிவை செவ்வாய் நீசம் ஆனவர்கள் மட்டும் அல்லாது யாவரும் பின்பற்றி வந்தால் செவ்வாயின் அனுக்கிரகம் உண்டுதான்,,,


ஓம் திருச்செந்தூர் முருகன் துணை,,


சதிஷ் குமார்

வியாழன், 17 பிப்ரவரி, 2022

vasthu

 புதிய கட்டிடம் கட்ட "பூமி பூஜை" செய்வதற்கு தேவையான பொருட்கள்


எலுமிச்சை 5

மஞ்சள் 100கி

வெள்ளை நிற காடா துணி 1/4 மீ

பூ 3 முழம்

வெற்றிலை

பாக்கு

வாழை பழம்

தேங்காய்

வாழை இலை

சூடம்

பத்தி

சந்தனம்

குங்குமம்

செங்கல்

மணல்

பாலகுச்சி

1 குடம் நல்ல தண்ணீர்

1 செம்பு பால்

1 தாம்பாளத்தில் விபூதி

கோமியம்

நவதானியங்கள் 1 செட்

நவரத்தினம் 1 செட்

இனிப்பு

அரிவாள்

தட்சிணை

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

Vasthu parikaram

பணப் பெட்டகம்

💰💰💰💰💰💰💰


வணக்கம் நண்பர்களே அனேக அன்பர்கள் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த பதிவு செய்கிறேன்.


ஐயா எவ்வளவு காசு சம்பாதித்து கொண்டு வந்தாலும், வீட்டில் வைத்தாலும் தங்குவதில்லை. 


ஐயா கஷ்டப்பட்டு உழைத்தாலும், எங்களுக்கு வருமானம் குறைவாக வருகிறது, சேமிப்பும் இல்லை. எங்கள் வீட்டில் பணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளை , அன்பர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் இந்த பதிவு.


தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் ONLINE BANKING / DIGITAL MONEY TRANSACTION என பல்வேறு வசதிகள் இருந்தாலும் அன்றாடம் அவசர தேவைக்காக வீட்டில் பணம் வைக்க வேண்டியுள்ளது.


அந்த பண பெட்டகத்தை சரியான இடத்தில் வைத்தால் , வீண் செலவுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படும். அதனால் பணம் சேமிப்பு உண்டாகும்.


1 . எந்த திசையில் பண பெட்டகமும் வைக்க வேண்டும்?


2. என்ன பொருட்களை அதில் வைக்க வேண்டும்?


3. எந்த பொருட்களை அதில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்?

என்பதை பற்றி பார்ப்போம்.


பண பெட்டகமும் வைக்க சரியான திசை, தென்மேற்கு எனப்படும் நைருதி திசையாகும். இந்த தென்மேற்கு திசை பிரித்திவி எனப்படும் மண்தத்துவம் உடையது. மண் என்பது ஒன்றை நிலையாக வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. இந்த தசையில் பண பெட்டகத்தில் பணத்தை வைக்கும் பொழுது, அது நிலைத்து நிற்கிறது.


தென்மேற்கு திசையில் வைக்க முடியாத பட்சத்தில், இரண்டாம்பட்சமாக தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்துக்கொள்ளலாம்.


வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், மேற்கண்ட மூன்று திசையும்  மூடிய திசையாகும். கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு வடகிழக்கு போன்ற பகுதிகள் திறந்த பகுதிகளாகும். 


பணப் பெட்டகத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எப்பொழுதும் வைக்கவேண்டும். தேவையின் போது திறக்க வேண்டும், தேவை இல்லாத பொழுது எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும்.


தென்கிழக்கு, தெற்கு, மேற்கு , வடமேற்கு பார்த்து வைக்கக் கூடாது. இது பண வரவை தடைசெய்யும் , வீண் செலவு உண்டாகும். அதனால் சேமிப்பும் உண்டாகாது. அப்படியே சேமித்தால் அது தங்காது.


தென்மேற்கு, தெற்கு, மேற்கில் பண பெட்டகம் வைக்க முடியாவிட்டால், செல்வத்தின் அதிபதியான குபேர திசையான வடக்கில் வைக்கலாம். வடக்கு திசையில் வைக்கும்பொழுது, கிழக்கு , வடக்கு , வட கிழக்கு பார்த்து திறக்கும் படியான அமைப்பு இருக்க வேண்டும்.


பணபெட்டகம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமான இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வார்.


பணப் பெட்டகத்தில் சிவப்புநிற துணி விரித்து அதன்மீது பணம், நகை போன்றவற்றை வைக்க வேண்டும்.


பணம், நகை, டாக்குமெண்ட் தனித் தனியாக வைக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்க கூடாது.ஒவ்வொன்றுக்கும் இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும்.


பணப்பெட்டியில் நறுமணம் கமழும், பச்சைகற்பூரம், ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தூயசந்தனம் போன்ற பொருட்களை, பச்சை துணியில் முடிந்து உள்ளே வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதில் உள்ள பொருட்களை மாற்றி புதிதாக வைக்க வேண்டும்.


வெள்ளியினால் செய்யப்பட்ட மகாலட்சுமி நாணயம் ஒன்று வைப்பது செல்வ வளம் உண்டாகும்.


தெற்கு மேற்கு தென்மேற்கு திசையில் வைக்கும் பண பெட்டகம் மஞ்சள் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். பச்சை, கருப்பு நிறங்கள் ஆகாது. இளம் நிறமுடைய வர்ணங்கள் ஏற்புடையது. பண பெட்டகத்தில் வெளிப்புறத்திலும், உட்புறத்தில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் குறியீடு வரைந்து வைப்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கும்.


பல வீடுகளில் பண பெட்டகத்துக்கு அடர்பச்சை (Dark Green) நிறம் பூசி தென்மேற்கு மூலையில் வைத்திருப்பார்கள், அது தவறானது.


பணப் பெட்டகத்தை எப்பொழுதும் துடைத்தார் போல் காலியாக வைக்க கூடாது. ஓரிரு நாணயங்கள் ஆவது அங்கு இருக்க வேண்டும்.


பணப் பெட்டகத்தை அடியில், சரியான சப்போர்ட் கொடுத்து ஆடாத படி வைக்க வேண்டும்.


பணப் பெட்டகத்தின் எதிரில் குளியல் அறை , கழிவறை, சமையல் அறை வரக்கூடாது.


பணப் பெட்டகத்தை பிரம்மஸ்தானம் என்னும் வீட்டின் மையப் பகுதியிலும், பீம் எனப்படும் உத்திரத்தின்  அடியிலும் வைக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது வீட்டிலும் தொழிலிலும் தேவையில்லாத பண சம்பந்தபட்ட பாரத்தையும், பதட்டத்தையும் தரும். 


 

Holy grass

#தர்ப்பை # holy grass

இதை ஹோம சடங்குகளில் பார்த்து இருப்போம்.. இதன் உபயோகம் நிறைய இருக்கிறது‌ அதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்..

இது ஒரு தெய்வீகமான மூலிகை ஆகும் நீரில்லாமழும் வளரும் தன்மை கொண்டது 

இதில் மூன்று வகையான தர்ப்பை இருக்கிறது  நுனி பகுதி பெரியதாக இருந்தால் பெண் தர்ப்பை மேலிருந்து ஒரே சீராக இருந்தால் ஆண் தர்ப்பை அடிப்பகுதி பெரியதாக இருந்தால் அலி தர்ப்பை என்று சொல்லப்படுகிறது


ஆண் தர்ப்பை உபயோகிப்பது மிக நல்லது..


 இந்த புல்லை ஊறுகாய் ல போட்டு வைத்தால் கெடாமல் நீண்ட காலம் இருக்கும்

 

இந்த புல்லை எரித்து அந்த சாம்பலை வெங்கலத்தால் செய்யப்பட்ட கோவில் மணிகள் வீட்டில் பூஜை அறையில் உள்ள மணிகளை சாம்பலில் நீர் கலந்து சுத்தம் செய்ததால் மணிகளின் ஓசையின் தன்மை மாறாமல் இருக்கும்..


இதை கட்டுகளில் இருந்து உருவும் போது அடி பகுதிகளில் இருந்து தான் உருவ வேண்டும்..


தர்ப்பை புல் நாட்டு மருந்து கடைகளில் பூஜா ஸ்டோரில் கிடைக்கும் 108 தர்ப்பை அடங்கிய தர்ப்பை கட்டை வாங்கி வந்து  சிகப்பு நூலில் அடி பாகத்தில் கட்டி எட்டு முடிச்சு போட்டு தலைவாசலில். நுனி பகுதி வடக்கு பக்கம் பார்த்து இல்லை கிழக்கு பக்கம் பார்த்து இருக்க வேண்டும்  இப்படி கட்டி வைத்தால் வீட்டில் உள்ள பாஸிட்டிவ் நெகடிவ் எனர்ஜிகளை சம நிலை படுத்தி சகல சந்தோஷங்களையும்வீட்டிற்குள் அழைத்து வந்து விடும் பிரான சக்தியை அதிகரிக்கிறது.. செல்வவளம் அதிகரிக்கும்..

சனி தோஷங்களை நீக்க பயன்படுகிறது

.

தர்ப்பையில் அடி பாகத்தில் மகாவிஷ்ணு நடு பாகத்தில் பிரம்மா நுனி பாகத்தில் சிவனும் வசிப்பதாக சொல்ல படுகிறது..


 திதி கொடுக்கும் நாட்களில் ஹோமம் நடத்தும் போது இந்த புல்லை நம் மோதிர விரலில் கட்டி விடுவார்கள் எதற்காக தெரியுமா ஆகாயத்தில் உள்ள பாஸிட்டிவ் எனர்ஜிகளை மோதிர விரல் வழியாக நம் இடது பக்க மூளைக்கு சென்று நல்ல விஷயங்களை நாம் மூளைக்குள் உருவாக்கும் வெற்றிக்கு வழிகாட்டும்..


இந்த புல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குடி நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூடு தணியும் சுகர் குறையும்.. உடல் வலுவடையும் புத்தி கூர்மை தரும்.இரத்தம் சுத்தமாகும் .. உடல் எடை குறையும்..


வயிற்றில் புண் வாயில் புண் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு உடல் சோர்வாக இருப்பவர்கள் இந்த புல் போட்டு கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் சரியாகும்..


இந்த புல்லில் பாய் செய்து அதில் படுத்து வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் நீங்கும் டையாலிஸ் செய்வது நாளடைவில் நீங்கும். நன்றாக தூக்கம் வரும் நமது உடலில் கெட்ட சக்திகளை அகற்றும்..மன உளைச்சல் நீங்கும் இதில் உட்கார்ந்து தியானம் செய்ய சீக்கிரம் தியான நிலைக்கு செல்லலாம்..


வீட்டில் அடிக்கடி எதாவது பிரச்சினை சண்டை சச்சரவு என்று இருந்தால் மஞ்சள் கலந்த நீரை தர்ப்பை புல்லில் தொட்டு வீடு முழுக்க தெளிக்க பிரச்சினை சரியாகும்...

 சரியாக தூக்கம் வராதவர்கள் கெட்ட கனவுகள் வருகிறது  என்பவர்கள் இந்த தர்ப்பையை தலகானிக்குள் வைத்து உறங்கினால் பிரச்சினை சரியாகும்..


வீட்டில் தெய்வ சக்தியை வரவழைக்க தர்ப்பை புல்லில் பச்சை கற்பூரம் தடவி வீட்டின் நாலு பக்கமும் போட்டு வைக்கலாம் இல்லை வெள்ளி கிழமை பச்சை கற்பூரம் தர்ப்பையில்  தடவி தூபம் போடலாம்..

இந்த புல்லை ஒரே சீராக மடித்து ஒரு தாயத்தினுள் வைத்து அதில் சுத்தமான பசுஞ்சான விபூதியை நிரப்பி மூடி வைத்து ஒரு அமாவாசை தினத்தன்று சிவன் கோவிலில் வைத்து கழுத்தில் அணிந்து வந்தால் உங்களுக்கு இறை சக்தி கூடும் கெட்ட சக்திகள் உங்களை‌ அனுகாது  என்று சொல்லப்படுகிறது


இந்த தர்ப்பையை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து  நூல் மாதிரி செய்து  அதில் பூக்கள் மற்றும் வில்வ இலைகளை சேர்த்து கட்டி சிவனுக்கு மற்றும் திருமாலுக்கும் அணிவித்து வந்தால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.... இது கேரளா பெண்கள் அதிகம் உபயோகிப்பார்கள்..


தர்ப்பை புல்லை எரித்து அந்த கரியில் சுத்தமான பசு நெய் கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதை நெற்றியில் வைத்து சென்றால் போன காரியங்கள் தடையின்றி நடக்கும் முக்கியமாக கண் திருஷ்டி விலகும்..

நம் கர்ம விணைகள் குறைய ..நாம் குளிக்கும் நீரில் தர்பை புல்லை போட்டு குளிக்க படிப்படியாக நீங்கும்..


இதை வீடுகளில் வளர்க்க விஷ ஜந்துக்கள் வராது வைரஸ் தடுப்புகளாக செயல் படும்..வீடு முழுக்க பாஸிட்டிவ் எனர்ஜிகளை நிரப்பும்..

 தர்ப்பையின் சில துண்டுகள் பணம் வைக்கும் இடத்தில் பர்சில் வைக்க  பண புழக்கம் அதிகரிக்கும் ‌..


இது திருநல்லாறு தர்பனேஸவரர் ஆலயத்தில் தல விருட்சமாக உள்ளது..


  செடி தேவை பட்டால் விலைக்கு கிடைக்கும் 150+70 கூரியர் சார்ஜ் 9840290714 என்ற எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்..


போஸ்ட் பிடித்து இருந்தால் லைக் அன்ட் ஷேர் பன்னுங்க நன்றி... 

Cancer cure number

 345089830 கேன்சர் ஐ உடலின் ஒவ்வொரு செல்லில் இருந்தும் நிரந்தரமாக நீக்க எழுதவும். ஊதா பேனா

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

Hair care news


 கேசம் -முடி


தலை முடிகள் கேது குறிக்கும்,


முடிவு என்றாலும் கேது (end)((பாம்பின் வால்)


முடி சூட்டிய மன்னன் என்றாலும் கேது(மகம்-கிரிடம்)


தலை மேஷம் தலை முடி அஸ்வினி


அந்த அஸ்வினியில் அரசன் சூரியன் உச்சம் ,,,,,( முடி சூட்டிய மன்னன்,)


தலை முடிக்கு ப்ரோட்டீன் சத்து தேவை 

சூரியனின் தானியத்தில் க்ளுடன் என்ற ப்ரோடீன் சத்து உண்டு,,,,(original wheat)


முடி, முடிவு, முடிதல், முடிசூடுதல் ,முடிச்சு,,,முடிபின்னல் (ஜடை)யாவும் கேது


கேது பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் இருப்பாம்பு பின்னியது போல ஜடைகள்,,


ஜடை என்றால் பெண்களுக்கு அழகு,,


ரிஷப ரோகிணி மிருகசிறுசம் இவற்றின் யோனிகள் ஆண் நாகம் பெண் சாறை பாம்புகள் ,,,,


ரிஷபம் பெண் ராசி இங்கு சந்திரன் சுக்ரன் பெண் கிரகங்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்,, 


இயல்பாகவே ரோகிணி மிருகசிறுசம் நட்சத்திர நட்புக்கள் பின்னி பிணைந்து இருப்பார்கள்,,


ரிஷபம் கடகம் பெண்களுக்கு,,மற்றும் சர்ப்ப நட்சத்திரங்களான ரேவதி, கேட்டை, ஆயில்யம் இவர்களுக்கும்  பெரும்பாலும் நல்ல வளமையான ஜடைகள் உண்டு,,,


சூரியன் அல்லது செவ்வாய்,,,எனும் நெருப்பு கிரகங்கள்,,,,,


 நீர் கிரகங்களான சந்திரனை அல்லது சுக்கிரனை தொடர்பு கொண்டால் முடி வளர்ச்சி குறைவு உஷ்ணத்தால் முடி உதிரலாம்,,,


,மற்றும் லக்கினத்தில் சூரியன் அல்லது செவ்வாய் இருந்தாலும்  உஷ்ணத்தால் முடி வளர்ச்சி குறைவு படலாம்,,,


உஷ்ணம் குறைக்க நிறைய வழிவகைகள் உண்டு,,


 புது ரத்தம் உற்பத்தி ஆகுவதற்கும் வழி வகைகள் உண்டு,,, 


முடி சம்பந்தப்பட்ட மருத்துவம் எடுப்பது தவறில்லை,


, மருத்துவர்களும் மூலிகை எண்ணெய்கள் பரிந்துரை செய்து வருக்கிறார்கள்,,,


எண்ணெய் தேய்த்தாலும் result இல்லை என்பார்கள்,,


 நல்ல மருத்துவராக இருந்தால்  ஒரு கேள்வியை எழுப்புவார்,,,


 நீங்கள் வயிறு சுத்தம் செய்து எத்தனை வருடங்கள் ஆகிறது?என்பார்,,,,


6மாதம் ஒரு முறை பேதி எடுப்பது அவசியமே,, 


எனிமா மற்றும் சித்த மருத்துவர் உதவியால் பேதி எடுத்தல் நலம்,, 


நம் அன்றாட உணவில் எவ்வளவோ chemical உள்ளே சென்று கொண்டு இருக்கிறது,,,


அசைவம் உண்கிறோம்,,,,வெள்ளை சீனி மூலம் தயாரித்த இனிப்பு உண்கிறோம்,,


 இவை எல்லாமே குடலில் புழுக்களை உற்பத்தி செய்கிறது,,,,


 இந்தகுடல் பூச்சிகள் நம் உண்ணும் உணவு மூலம் உற்பத்தி ஆகும் ரத்தத்தில் உள்ள சத்துக்களை தின்று விடுகிறது,,


அதன் விளைவு தான் முடிகள் சார்ந்த பிரச்சனை,, 


ஹீமோகுளோபின் பற்றாக்குறை,,,


,6மாதம் ஒருமுறை வயிறு சுத்தம் செய்வதால் முடிகள் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்லாது தோல் பிரச்னையும் மற்றும் பல வியாதிகளை தடுக்க இயலும்,,


நம் அம்மா மார்கள் கூட சொல்வதுண்டு முன்னடிலாம் முடி அதிகம் இருந்தது ஆனால் இப்ப தான் முடி எல்லாம் போச்சு என்று சொல்வதுண்டு,, முடிகளுக்கு எண்ணெய் தேய்ப்பதால் மட்டும் முடிகள் வளர்வதில்லை இயல்பான ஊட்ட சத்து மூலம் தான் முடிகளும் வளரும்,,,அந்த ஊட்டச்சத்தை தான் வயிற்றில் வாழும் புழுக்கள் தின்று விடுகிறது,,


 குடலில் வாழும் குட்டி குட்டி புழுக்கள் கேது குறிக்கும்,, இவரை அவரின் மல வாய் மூலமே வெளியில் துரத்த வேண்டும்,,,,,


ஓம் நமசிவாய


சதிஷ்குமார்,,

திங்கள், 31 ஜனவரி, 2022

Ratha sapthami

 (07 -02-2022 ) ரத சப்தமி & சூரிய ஜெயந்தி 

சூரியனை வழிபட மறவாதீர்கள்...!! 


( 8.2.2022 - வாக்கியப்படி ரதசப்தமி )


திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் கொண்டாடப்படும் நாள்.


ரத சப்தமி... சூரியன் பிறந்த கதை...!* 


காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 


 அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன். 


சூரியன் பிறந்த நாள் திதிகளில் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். அந்த நாளிலேயே சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.


 *எருக்க இலை கொண்டு ஏன் நீராடுகிறோம்?* 


மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர்விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர்விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், 'பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூட பாவம்தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று கூறினார். 


உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் இருந்து மிகப்பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா? என்று கேட்டதற்கு வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அந்த பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். 


உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். 


உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார். புண்ணியம் கிடைக்கும் பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரதசப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று அருளினார்.


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...