வியாழன், 27 பிப்ரவரி, 2020

Neyveli korona virus நெய்வேலி பயங்கரம் -கொரானா வைரஸ்

Neyveli high protection
கடலூர் மாவட்டத்தில் உள்ள
நெய்வேலி நகரில் சூப்பர்பஜார் என்று சொல்லபடுகிற பகுதியில் உள்ள கோழிக்கறி கடை அதிகமாக உள்ளது

அங்குள்ள ஒரு கடையில்
இருந்து 25-2-2020 தேதி காலை 21 பிளாக் பகுதியை சார்ந்த பாண்டு என்பவரின் மகன் பாண்டி கோழிக்கறி வாங்கி சமைத்து சாப்பிட்டதாகவும் அதன் பின்பு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக நெய்வேலி GH  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு அவரின் இரத்தத்தில் கொரனாவைரஸ் கலந்துள்ளதாகவும்


அவரின் உடல் கொரானா வைரஸால் பாதிக்கபட்டுள்ளார் என 26-022020 அன்று வதந்தி கிளம்பியது
இதனால் கடலூர் பகுதியிலுள்ள அனைத்து கோழிக்கறி கடை முழுவதும்
விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தமடைந்தனர்

இவ்வாறான வதந்திகளை தயவுசெய்து பரப்பி மக்களையும் வியாபாரத்தையும் கெடுக்க வேண்டாமென நெய்வேலி நகர மக்கள் தெரிவித்துள்ளனர்

வேலைவிட்டு தூக்கியதால் பரிதாபம் - சென்னை ஆவடியில் கோர சம்பவம்

வேலைவிட்டு தூக்கியதால் பரிதாபம் - சென்னை ஆவடியில் கோர சம்பவம் 
சென்னையில் பத்து வருடங்களுக்கு மேல் ஒரே நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்த இளைஞரை, வேலையை விட்டு நீக்கியதால் அந்த இளைஞர் தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். 30 வயது இளைஞரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை தொழிற்சாலை நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. அதற்கான காரணமும் அவருக்கு தெரியவில்லை.
இந்நிலையில் 12 வருடங்களாக வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது அவரை வேதனையின் உச்சத்தில் தள்ளியது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் உள்ளவர்களிடம் சோகத்தில் அழுது புலம்பியுள்ளார். இதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஆறுதல் கூறியும், சமாதானம் அடையாத கணேஷ் தொடர்ந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் இருந்த  புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

New Pension Scheme - Fraud

சார்லஸ்_பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?

(அரசு ஊழியர்களின் பரிதாப நிலை)

    1.4.2003 அன்றுக்குப் பிறகு
#தமிழக_அரசுப்_பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் #பழைய_பென்ஷன் #திட்டம் (Defined pension scheme) #இல்லை என்றும்,

அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன?

 ஓர் அரசு ஊழியர் பெறும்.     ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது.

மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA)  இல் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.

PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக  (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எந்த உரிமையும் கோர முடியாது.

(கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement - இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.

#சரி_ஓய்வு #பெறும்_அரசு_ஊழியர்களுக்கு_
#என்ன_கிடைக்கும்?

 அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள்.

 அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு  10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது.

பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது.

 இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.

#சரி_ஓய்வு_பெறும்_முன்பே_விருப்ப #ஓய்வு_பெறுபவர்களுக்கு_என்ன #கிடைக்கும்?

 அவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.

 #சரி_பங்குச்சந்தையில்_நட்டம்
#ஏற்பட்டால் #யார்_அந்த_நட்டத்தை_ஏற்றுக்கொள்வது?

 நம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.

 சரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
பொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.
(எடுத்துக்காட்டு க்காக)
 
 இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824. (கடந்த வருடத்தில்)
 நான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கணக்கில் இருக்கும் உத்தேசமான தொகை: ரூ.10,40,000
நான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.

 அதன்பிறகு என் கணக்கில் இருக்கும்
 40 % தொகை: = ரூ.4,16,000.  இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய  40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.

 என்னுடைய 40 % தொகை   
= ரூ.4,16,000
இதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால்
ஆண்டுக்கு= ரூ. 41,600
மாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466
ஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.

2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.3000 ஆக இருக்கும். 2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும். அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

1.    இந்த நான்காயிரம் ரூபாயில் ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
2.  நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு வீடு வாங்க முடியுமா? இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே?

 CPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே?  என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே?

 இவ்வளவுதான் பாதிப்பா? இதையும் பாருங்கள்:

இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824. இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.
   என்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம். இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும் என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி. நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000. தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக்கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.
   வட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.
    நாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.
     
     இதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்றுவேலை,

வங்கி முதலாளிகளைச் செழிக்க வைக்க நம்மையெல்லாம் பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறோம்.

 புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்களும், அரசு ஊழியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளும் இதைச் சிந்திக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் மறு பதிவு

பகிர்வு
நெய்வேலி சார்லஸசார்லஸ

Navagiraga temples in chennai

சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்:

1) சூரியன்- அகஸ்தீஸ்வரர் கோயில் - கோலப்பாக்கம்
2) சந்திரன் - சோமனாதீஸ்வரர் கோயில் - சோமங்களம்
3) செவ்வாய் - வைத்தீஸ்வரர் கோயில் - பூவிருந்தவல்லி
4) புதன் - சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்
5) குரு - இராமனாதேஸ்வரர் கோவில் - போரூர்
6) சுக்கிரன் - வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு
7) சனி - அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்
8) ராகு - நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்
9) கேது - நீலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்

அனைவரும் இந்த கோயில்களுக்கு சென்று வழிப்பட்டு பயன்பெறுங்கள்

Kerala lottery results xmas bumper kerala lottery price


Kerala Lottery Results LIVE : 10-02-2020 


Kerala State Lotteries Results


Kerala Lottery Result Christmas New Year Bumper (BR.71)

കേരള സംസ്ഥാന ബംപർ ഭാഗ്യക്കുറി
നറുക്കെടുപ്പ് ഫലം
ക്രിസ്മസ് പുതുവത്സര ബംപർ

"Today X' mas New Year Bumper Lottery Live Result: Kerala lottery result live updates will be published at 2 pm on our website www.keralalotteries.net and the official result will be updated at 3 pm."
(-)
Today Kerala lottery result will be announced on 01/02/2020 at 02:00 pm. The Kerala lottery department held the draw of BR 71 X'mas-New Year Bumper lottery today 10.02.2020 at sharp 3 pm with the presence of officials in the Auditorium of Gorky Bhavan Near Bakery Junction, Thiruvananthapuram.
.
keralalotteries.net: kerala lottery result 10.02.2020 X'mas New Year Bumper BR 71 10 February 2020 result, 10 02 2020, kerala lottery result 10-02-2020, X'mas New Year Bumper lottery BR 71 results 10-02-2020, 10/02/2020 kerala lottery today result X'mas New Year Bumper, 10/02/2020 X'mas New Year Bumper lottery BR-71, X'mas New Year Bumper 10.02.2020, 10.02.2020 lottery results, kerala lottery result October 10 2020, kerala lottery results 10th February 2020, 10.02.2020 week BR-71 lottery result, 10.02.2020 X'mas New Year Bumper BR-71 Lottery Result, X'mas New Year Bumper Lottery 2019-2020  BR 71
.

Kerala Lottery Result Today

KERALA LOTTERY TODAY RESULT

ക്രിസ്മസ് പുതുവത്സര ബംപർ
ഭാഗ്യക്കുറി നറുക്കെടുപ്പ് ഫലം

Christmas New Year Bumper Lottery Result BR-71 Today
LIVE Date of Draw: 10/02/2020

Xmas New Year Bumper 2020 Official Lottery Results on 10.02.2020. Christmas Xmas New Year Bumper 2020 BR 71 Draw to be held on 10/02/2020 At Gorky Bhavan Near Bakery Junction Thiruvananthapuram.

1st Prize
Rs.12,00,00,000/- [Rs.12 Crores]
ST 269609 (WAYANAD

Saturn+Nishan+Rahu Good move in Famous

மிக அற்புதமான பதிவு
சனி - மக்களைக் குறிக்கும்
ராகு - பிரம்மாண்டத்தை கொடுக்கும்
புதன் - ஒரு தொலைத் தொடர்பு மக்கள் தொடர்பு என்ற காரண கரகம்

இது மூன்றும் இணைந்து அல்லது பார்வை இருந்தாலும் அது சுபத்தன்மை அடைந்து
1 - 5 - 9ஆம் அதிபருடன் தொடர்பு இருந்தாலும் அல்லது ஒன்பதாம் அதிபதி நட்சத்திரத்துடன் தொடர்பு இருந்தாலும்

அந்த திசையில் கோச்சார
ராகு அல்லது கோச்சார குரு

பிறந்த கால சனி மற்றும் ராகு மீது செல்லும் போது அவரது

ஜனன கால ஜாதக அடிப்படையில் அவரது திசை புத்திகள் மேற்சொன்ன
புதன் , சனி மற்றும் ராகு உடன் சம்பந்தப்பட்டவர்கள்  குறிப்பிட்ட காலத்தில் புகழ் அடைவார்

அதில் சனி அவருக்கு 3 6 8 12ல் மறையாமல் இருந்தால் அந்த புகழ் நிலைத்து இருக்கும் இல்லையென்றால் ஒரு சில கால கட்டத்தில் இருந்து காணாமல் போவார்கள்

உதாரணமாக நடிகர் அப்பாஸ் நடிகர் ஸ்ரீகாந்த் விளையாட்டு வீரர் திரு வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் வாசிம் ஜாபர் போன்றவர்கள் குறுகிய காலத்தில் கோலோச்ச முடியும்

அதேபோல சனி வர்கோத்தமம் அடைந்து அல்லது சனி குறைந்த பாகையில் இருந்தால் அவரை பிறப்பிலிருந்தே எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதன் மூலமாக அவர் பணம் சம்பாதிக்க முடியாது
பெரிதாக

உதாரணமாக சொல்லப்போனால் திருஞானசம்பந்தர்

முருகபக்தர் திரு கிருபானந்த வாரியார் போன்றவர்கள்  அனைவரும் சிறுவயது முதற்கொண்டே மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆனால் அதை பயன்படுத்தி அந்த புகழைப் பயன்படுத்தி அவர்கள் பணம் ஏதும் சம்பாதிக்கவில்லை

அந்த காரண கிரகத்துடன் இரண்டாம் அதிபதி ஆறாம் அதிபதி பத்தாம் அதிபதி தொடர்பு கொண்டால் அந்த புகழ் வெளிச்சம் மூலமாக மிகப் பெரிய அளவு சம்பாதிப்பர்

உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் அதேபோல நடிகர் சல்மான் கான் மலையாள நடிகர் திரு மோகன்லால் இவர்கள் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி உடனே சனி தொடர்பு இருக்கும் இவர்கள் அனைவரும் அந்தந்த துறையில் பிரபலமடைந்த உடன் விளம்பரத்தின் மூலமாக பல்வேறு நிறுவனத்தின் ஒப்பந்தம் மூலமாக தன்னை பொருளாதாரரீதியாக வலுப்படுத்திக் கொண்டனர்

எனவே இரண்டாம் அதிபதி ஒருவரின் மூலமாக சம்பாதிக்க முக்கிய காரணமாக இருப்பவர்

உண்மையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ராயர் ஐயாவின் குழு திரு ராயர் ஐ போல ஒரு தலைசிறந்த எழுத்தாளரின் பதிவைப் படித்த மகிழ்ச்சி அருமை அருமை

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...