சனி, 23 பிப்ரவரி, 2019

Tire lines










                                 White blood cells


வணக்கம் நண்பர்களே 🙏

நாம் ஏன் ஒழுக்கமாக
வாழ வேண்டும் தெரியுமா?

நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள்,நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.

காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடியாது;(ஆனால்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியது போல நடிக்கலாம்; நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்)

எப்போது நம் ஒவ்வொருவருக்கும் காம சக்தியை ஆன்மீக சக்தியாகா மாற்றும்போது,அப்போதுதான் நாம் ஆன்மீக மலர்ச்சியை நமது மனத்தால் அடைவோம் என்பது அனுபவ உண்மை!

இதில் தெய்வீக மற்றும் உடலியல் ரகசியம் புதைந்திருக்கிறது.

நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது.

இந்த விந்து பெண்ணுக்கும் ( சுரதோணியம் )உண்டு;

நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன;இந்த விந்துவை அளவோடு செலவழித்தால்,நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.

நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும்.நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.

நமது உடலுக்கு எடையைத் தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;

இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி,அழிக்கிறது.

அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.

நமது முகத்தில் தேஜஸ்ஸைத் தருகிறது. நமது இளமையைப் பாதுகாக்கிறது;

நமது ஆரோக்கியத்தோடு, செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.

இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.

இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;
அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;

மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;

குடும்ப நலம் சிறப்பாகஇருந்தால்,
நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.

இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.

அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,
முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;
அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்

இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்

மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஜபித்துவருகிறீர்கள் எனில்,
அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;

இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள், நவக்கி
ரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.

அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.

இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக குருபரம்பரையினர் ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.

உடல்நலம் பேணுவோம், அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்; இதைத்தான் திருமூலர்
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் னே என்று கூறினார்........ நன்றி 🙏

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...