Jothidam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Jothidam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 மே, 2021

Ragu kalam yema kandam

 மீள் பதிவு:-

#ராகு_காலம் / எமகண்டம்


சும்மா பேரகேட்டவுடனே பதறுதில்ல?


பொதுவாகவே மககள் மனதில் ஏன் சில ஜோதிடர்களே கூட இநத ராகுகாலம் எமகண்டம் இவற்றில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என ஒதுக்கிவைக்கிறார்கள்.... ஏன் என கேட்டாள் ஓரே பதில் ஆகாது / நடக்காது / முடியாது / பிரச்சனை இதுதான் பதில்....


நான் பல இடத்தில் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விசயம் விதி என்ற ஒன்று இருந்தால் விதி விலக்குகண்டிப்பாக இருக்கும்....


நமது முன்னோர்கள் ராகுகாலம் எம கண்டம் ஆகாது என சொல்லவில்லை... சில விசயங்களுக்கு மட்டும் ஒதுக்கி வைக்க சொன்னார்கள்....


வகைபடுத்தி சொல்லவில்லை காரணம் அன்றைய சாமனியனுக்கு இதை சொன்னால் புரிந்துகொள்ளும் தன்மை இல்லை.... அதனால் மொததமாக இந்த இரண்டு காலங்களை ஒதுக்க சொன்னார்கள்....


இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை படித்து புரிந்து கொள்ளும் தன்மை ஏறாக்குறைய அனைவரிடமும் உள்ளது....


நீங்க அனேகமாக கேள்விபட்டிருப்பீங்க யாராவது வீட்டில் பையன் ரொம்ப குறுப்பு செஞ்சா ராகுகாலத்தில் பொறந்து இருப்பானனும்....


ரொம்ப அடிவடி பையனா இருந்தா எமகண்டத்தில் பொறந்திருப்பான்னும் சொல்லுவாஙக.... இநத விசயம் தான் என்னை இங்கு ஆராய தூண்டியது....


தயவு செய்து ராகுகாலம் எம கண்டத்தில் ிறந்த குழந்தைகளை யாரும் ஒதுக்கவேண்டாம்.... எந்த சூழ்நிலையையும் வெல்லும் திறமை வாய்ந்தவர்களன இவர்கள....


அதுவும் எமகண்டம் கடைசி 24 நிமிடம் அதிலும் கடைசி நான்கு நிமிடத்தில் பிறந்தவன் உலகை வெல்லும் ஆற்றல் உடயவன்... காரணம் கேட்டால் அது சொல்ல முடியாது அது சீக்ரெட் இதனுடன் கிழமை அதிபதி முக்கியம்.... உங்களுக்காக ஒரு கிழமைமட்டும் சொல்கிறேன்.... வியாழக்கிழமை எமகண்டம் மிக சிறப்பு இதில் சில நட்சத்திரங்கள வந்துவிட்டால் அவனை வெல்வது கடினம்.... (நீங்களாக இந்த நேரத்தை கையாண்டு ஆப்ரேசன் செய்து குழந்தை எடுக்கவேண்டாம்... ஜோதிடரை அணுகவும்....ஏன் என்றால் இதில் பல சூட்சமங்களை இங்கு நான எழுதவில்லை)


சரி இப்ப விசயம் என்ன்னா

ராகு காலம் எமகண்டம் கெட்டதுன்னு சொல்லராங்களே ஏன்?


ரொம்ப சிம்பிளா சில விசயம் சொல்றேன் அத பொதுமக்கள் மற்றும் ஆரம்பநிலை ஜோதிடர்கள் புரிந்து கொண்டால் ராகுகாலம் எமகண்டம் இதை எங்கு ஒதுக்கனும் எங்கு சேர்கனும்னு உங்களுக்கு ஒரு ஜடியா கிடைக்கும்.....


♪விசாவே கிடைக்கல என்ன செஞ்சாலும் தடையுன்னு நினைக்கிறீங்களா? உடனே ராகு காலத்தில் விசாவுக்கு அப்ளை பன்னுங்க கிடைத்துவிடும்...


♪என்னன்னமோ செஞ்சுட்டோம் குழந்தை இன்னும் இல்ல அப்படிங்கீறீங்களா? ராகுகாலம் அல்லது எமகண்டத்தில் கணவன் மனைவி ஒன்னா சேருங்க அப்பறம் சொல்லுங்க....


♪என்னபன்னாலும் டிரான்ஸ்பர் கிடைக்கிலயா? ராகுகாலத்தில் அபளைபன்னுங்க


♪பெய்ல் கிடைக்கிலயா? ராகுகாலம்

இருக்கு....


♪போட்டியில் ஜெய்கனுமா? எமகண்டம் தான் சரியான நேரம்...


இப்படி பல விசயம்.... இதில் எப்படி நடக்கும்னு கேக்கரீங்களா?

காரகத்தை கிரகங்கள் சப்போர்ட் தேவை.... இதனுடய காரகத்தை அந்த நேரம் இயக்கும்...இதற்கு நேர் எதிர் விசயங்களை முடக்கும..... அதனால் தான் இத புரியமா ஏதேனும் தவறு செயு்து சாமானியன் கஸ்டபடுவான் அவனுக்கு காரகம் தெரியாது என்பதால் மொத்தமாக நமது முன்னோர்கள் ஒதுக்க சொன்னார்கள்....


பகலில் ராகு காலம் பார்த்தவர்கள் கூட இரவில் பார்க்கவேண்டாம் என முன்னோர்கள் சொன்ன காரணமும் இதற்கு தான்.... அன்றைய கால்த்தில் மனிதனுடய ஒரே சந்தோசம் மனைவியுடன் கூடுவது.... இதில் ராகு காலம் தேவையில்லை காரணம் போக காரகன் மற்றும் குழந்தை பிறப்பின் விதையே இவர்தான்..... 


அதனால் தான் திருமணம் செய்ய ராகுகாலம் பார்த்தார்கள்....

சாநதி முகூர்த்தததிற்கு ராகு காலம் பார்ப்பதில்லை....


#பாக்கியராஜ் சார் பாணியில் சொல்லனும்னா ராகு காலத்தில் வைககப்டும் சாந்தி முகூர்த்தத்திற்கு முருங்கைகாய் தேவையில்லை....


குறிப்பு: இது ராகு காலம் எமகண்டம என்ன செய்யும் என தெரியதவர்களுக்கு ஆக எழுதப்பட்ட பதிவு..... இது ஆரம்ப படிப்பு இதை எல்லாம் ஒரு பதிவுன்னு பதிவா போடுறானே இவன் என விசயம் தெரிநத மூத்த ஆசான்கள் என்னை திட்ட வேண்டாம்.....

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

cgepa-Jothidam


12 வீடு தரும் உயர்வு தாழ்வுகள்


12 ஆம் வீடு

1 சூரியன்(சிவன்)
2 சந்திரன்(பார்வதி)

சிவனும் பார்வதியும் கூடும் இடம் 12 அதாவது கணவன் மனைவி கூடும் படுக்கை அயன சயன கட்டில் பாவம்,,12 ஆம் வீடு ஆகும்,,

12 ஆம் வீடு கட்டில் சுகம் மூலம் விரயம் ஆகும் விந்து ஸ்ரோனிதம் குறிக்கும்,, விரய ஸ்தானம் என்ற பெயரும் உண்டு,,,

கால புருசனுக்கு 12இல் மீனத்தில் குரு ஆட்சி சுக்ரன் உச்சம்,,, குரு என்றால் பொன் நகை , சுக்ரன் என்றால்,, விந்து,, ஸ்ரோனிதம்,வெள்ளி நகை, பணம், பொருள், குறிக்கும்,,,

நாம் உடலில் இருக்கும் ஜீவ காந்தம் (விந்து,) நாம் தொழில் செய்து சேர்த்தி வைத்த பணம், நகை,, இவை எல்லாம் நமது வாழ்க்கைக்கு எபோதவது விரய செலவு வரும்போது அடகும் வைபோம்,, சில நேரம் விற்கும் சூழல், உருவாகும்,, சுக்ரன் என்றால் பெண், விதவை பெண், குறிக்கும்,, உற்றார் உறவினர் உதவி இல்லாத விதவைக்கு பண தேவை என்றால் அவளும் சில நேரம் உடலை விற்று பணம் புரட்டி வாழ்க்கை நடத்தும் பெண்கள் அவலம் சொல்ல முடியாத துயரம்,,

 பணத்திற்காக sperm donate செய்கிற ஆண்களும் உண்டுதான், இவை எல்லாமே விரயம் என்று பொருள் படும்,

 12ஆம் வீடு நம் மோட்சம் குறிக்கும் பாவம்,,, மற்றும் தலை மறைவு வாழ்க்கை குறிக்கும், கொலை செய்து தலைமறைவு, கொள்ளை அடித்து தலை மறைவு, வெளிநாடு வாழ்கை,,, சிறைவாசம்,, இவை யாவும் குறிக்கும்,,

சூரியன் சந்திரன் இவர்களுக்கு கிரகணம் ஏற்படுத்த கூடியவர்கள் ராகு கேது தான்,,12 ஆம் பாவம் 1 சூரியன்,2 சந்திரன் அதாவது கணவன் மனைவி சேரும் இடத்தில் கிரகணம் ஏற்படுத்த கூடிய நிழல் கிரகம் இருந்தால் அந்த கட்டில்  அயன சயன பாவ பலன் கிடைக்குமா,?? கிடைக்காது

கால புருசனுக்கு 12 மீனம் இது நீர் ராசி, கடலை குறிக்கும்,,தூர மாநிலம், கடல் தாண்டி தூர தேசம் செல்லுதல், இதைக் குறிக்கும்,, இந்த ஜாதகர் வெளிநாடு செல்வாரா மாட்டாரா என்ற கேள்வி கேட்கும் போது ஜோதிதார் முதலில் 12 ஆம் வீடுதான் முதல் ஆய்வு,,செய்வார்,,
மற்றும் சிறை தண்டனை குறிக்கும், வெளிநாடுகளில் பணயகைதி நிலையை குறிக்கும்,,, எங்காவது ஒரு இடத்தில் மாட்டி கொண்டு முழிக்கும் நிலையை குறிக்கும்,, இன்னும் சொல்ல போனால் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு படி கூடஇல்லாத கிணற்றுக்குள் விழுந்து மேலே வர முடியாத நிலையை குறிக்கும், மற்றும் இந்த 12 ஆம் வீடு
 சிறைக்கு சமமான தனிமை ,, மன அழுத்தம்,,, எல்லாரும் இருந்தும் அனாதை போல பரதேசி போல வாழ்வது, கேட்பதற்கு நாதி இல்லாத நிலை குறிக்கும்,, நிம்மதியான உறக்கம் இருக்குமா இருக்காதா, நல்ல பஞ்சு மெத்தையில் தூங்குவாரா கட்டாந்தரை படுக்கை தூக்கமா என்று எல்லாம் குறிக்கும் பாவம் இந்த 12 ஆம் வீடு  இப்படி பட்ட வீட்டில் கிரகம் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது,, அப்படியே இருந்தாலும் சர்ப்பம் ராகு சர்ப்பம் கேது இந்த இரண்ட தவிர வேறு கிரகம் நிற்கலாம் எப்படியாவது வாழ்க்கையை ஓட்டி விடலாம்,,

12இல்  ராகு கேது இருப்பின் வாழும் வாழ்க்கையே நரக வாழ்க்கை தான்,, இதில் கேது இருப்பின் மோட்சம் என்கிறார்கள், ஆம் தற்போதே நரக வாழ்க்கை அனுபவித்து விட்டால் மோட்சம் தானே,,, ராகு இருப்பின் மறு பிறப்பு உண்டு என்று சொல்ல படுகிறது,, அதை வேறொரு பதிவில் பார்போம்

 12 இல் ராகு கேது இருப்பின் மண வாழ்க்கையை துண்டாடுகிரார்கள்,,12இல் ராகு கேது இருப்பின் அந்த ஜாதகருக்கு தாம்பத்யம் மறுக்க படுகிறது,, ஒன்று வெளிநாட்டில் மனைவியை பிரிந்து இருப்பார்,,அல்லது சிறையில் இருப்பார், அல்லது சிறைக்கு சமமான தனிமை,, அனுபவிப்பர்,,, கணவர் இருந்தும் இல்லாத மாதிரி,, இருக்கும், மனைவி இருந்தும் இல்லாத மாதிரி இருக்கும், சிலருக்கு பிள்ளை பேரு கூட கேது ராகு  தட்டி பரிகிரார்கள்,, ஆம் படுக்கை சுகமே இல்லாத நிலை உருவாக்கி விட்டால் பிள்ளை பேரு எப்படி கிட்டும், சிலருக்கு பிள்ளை பேரு கிடைக்கும்,, சிலருக்கு விவாகரத்து,, சிலருக்கு விதவை, இது போன்று நிரந்தர பிரிவு கொடுத்து விடுகிறார்கள்,, இதை ஓரளவு சமாளிக்க சுப பிரிவு தான் நல்ல பரிகாரம், மனைவி ,பிள்ளை, குடும்பத்தை விட்டு தூரமாக இருப்பது அவ்வபோது வந்து குடும்ப வாழ்க்கை நடத்தலாம், இது நிரந்தர பிரிவை அதாவது, விவாகரத்து விதவை என்று கொடுக்காது,,12இல் ராகு இயற்கையாகவே பணம் சம்பாத்யம் நோக்கில் குடும்பம் மீது பற்று இல்லாமல் பணத்தை அபரிமிதமாக சம்பாத்தியம் செய்வார்,,பெரும்பாலும் பணக்காரரகளுகு 12இல் ராகு இருக்கும்,, அதே போல 12இல் கேது இருந்தாலும் போதும் என்ற அளவிற்கு பணம் வசதி, இருக்கும்,, பிரச்சினையிழ் இருந்து தப்பிக்க சுப பிரிவு தான் பரிகாரம்,, எந்த கோவில் போனாலும் சரியாகாது,, வேலை நிமித்த சுப பிரிவே தான் பரிகாரம்,

 தூங்கும் பாயில் பாம்பு இருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்,, பயந்து கொண்டேதான் இருக்க முடியும்,, ஆகவே 12 எனும் பாவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து தூங்கும் படுக்கை அறை எனும் 12இல் ராகு கேது இருப்பின் தாம்பத்யம் சுக படாது,, பிரிவுகள், சண்டைகள், விவாகரத்து, விதவை, சிறை, என்று பிரச்சினை மேல் பிரச்சினை கொடுத்து கொண்டிருக்கும்,, எப்போது வரை என்றால் நாம் குடும்பத்தை விட்டு தூரமாக பிரிந்து இருக்கும் வரை,, தூரமாக செல்ல செல்ல தோசம் குறையும், எனக்கும் மனைவி இருக்கிறாள் கணவன் இருக்கிறான் குழந்தை இருக்கிறது எனக்கென்று சொல்லிக்கொள்ள குடும்பம் இருக்கிறது என்று சொல்லி ஓரளவு காலம் தள்ள முடியும்,,
 12இல் ராகு கேது இருந்தும் நான் நல்ல படியாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன் என்று சொன்னால் அது அவர்கள் பாக்கியமே,,அவர்கள் முன்னோர்கள் புண்ணியம் செயல்கள் காப்பாற்றுகிறது எனலாம்,,,,,

மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கலுக்கும் தாம்பத்யம் தட்டி பறிக்கப்படுகிறது,, குறிப்பாக சிம்மம் மகம் கால புருசனுக்கு 5 ஆம் வீடு,,, ஆகும், சிம்ம ராசிக்கு 12 ஆம் பாவம் கடக ராசி,, கடகம் சந்திரன் அதிபதி,, சந்திரனின் பரம எதிரி சுக்ரன் ஆவார்,, கடக பாவத்திற்கு பாதகம் அதிபதி சுக்ரன்,, அதாவது கடக லக்ன ராசிக்கு பாதக அதிபதி சுக்ரன் ஆவார்,,,, சிம்மரசிகு அயன சயன பாவம் கடகம் இப்படி இருக்கும் போது காம அதிபதி சுக்ரன்,,, சந்திரன் வீட்டுக்கு நற்பலன் எப்படி செய்வார்,,, செய்ய மாட்டார்,,,, சிம்ம ராசி இல் முதல் நட்சத்திரம் மகம் இந்த மகதிது 12 ஆம் வீடு மிக அருகில்,,, உள்ளது, அதனை அடுத்து பூரம், உத்திரம் வரும்,, இந்த பூரம் உத்திரம் மக நட்சத்திரத விட ஓரளவு பிரச்சினையை சந்திக்க மாட்டார்கள்,, அதே போல கடக லக்ன காரர்களுக்கு திருமணம் தாமதம் செய்வார் இந்த களதிற காரகன்,,,, ஆக மகம் நட்சத்திர காரர்கள் உம் கணவன் மனைவி என்ற உறவை அருகருகே வைத்து இருக்க கூடாது,,, சுப பிரிவு ஏற்படுத்தி கொண்டு வாழ நலம்,, அந்த மண வாழ்க்கை நிலைக்கும்,, இல்லை எனில் விவாகரத்து அல்லது தனி கட்டயாக இருக்க நேரிடும்,,,

12 இல் ராகு அல்லது கேது இருக்கும் ஜாதகர்கள் மற்றும் மகம் நட்சத்திர காரர்களும், வாழ்க்கை துணையை வேலை நிமித்தமாக சுபமாக பிரிந்து இருப்பதே பரிகாரம்,, அதாவது அருகருகே இருந்தால் சுக்ரணின் காரகமான 12 எனும் அயன சயன தாம்பத்யம் சுகம் கிடைக்காது,, பிரச்சினை தலை தூக்கும், பிள்ளை பேரு பிரச்சினை குடுக்கும்,, விவாகரத்து வரை கொண்டு வந்து விடும்,,, அல்லது தனிமை சிறை,, போன்ற இருட்டுவாழ்க்கை,அமையும்,கொஞ்சமாது மண வாழ்க்கை குடும்பம் நடத்த வேண்டுமென்றால் இதை செய்தே ஆக வேண்டும்,,

#சுக்கிரன்#கேது

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

Budhan Rasi

சற்று நிற்க..

       புதன் எப்படி திருடன் ஆகிறான்..?

                         உதாரணமாக..

   இடத்தை விற்பது நீங்கள்  வாங்குவது
                          வேறுஒருவர்.!

    இந்த இடத்தில் புரோக்கர் கமிசனை
               இடத்தை விற்றவரிடமும்
          வாங்கியவரிடமும் அதாவது
    இருவரிடமும் கமிசன் தொகையை
              கறந்து விடுவான் புதன்.!

          இப்படிப்பட்ட அறிவின் நிலை
      எதிர்காலத்தில் எப்படிப்பட்டதாக
                        இருக்கும்.!

   யார் இறந்தால் என்ன.. பிழைத்தால்
              என்ன..?எனக்கு தேவை
   கமிசன் பணம் என்கிற கோணத்தில்
         புதன் செயல்படுவதால்தான்
        புதன் திருடனாகிவிடுகிறான்..!

       இந்த இடத்தில் குரு பகவானுக்கு
    நிகராக அறிவை பெற்ற புதன் இந்த
              ஒரேயொரு செயல்பாடு
காரணமாக குரு பகவானிடம் தோற்றுப்
                   போய் விடுகிறார்.!

   இந்த இடத்தில் குரு பகவான் பெரிய
               மனிதராகிவிடுகிறார்..!

    ஆனாலும் புதனின் மனதில் ஓடும்
                   விசயம் இதுதான்.!

 பெரிய மனுசன் என்கிற பட்டம் யாருக்கு
         வேண்டும்..? பணம் இருந்தால்
போதும் பெரிய மனுசன் என்கிற பட்டம்
       தானாகவே எனக்கு வந்துவிடும்
    என்கிற எண்ணம் புதனின் மனதில்
            ஓடிக்கொண்டேயிருக்கும்.!

                         நன்றி #ராயர்
   அழைக்க..99523 77403..95664 77403

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

Vigari year 2019 //Good news

விகாரி வருட பலன்கள்

பார விகாரி தனிற் பாரண நீருங் குறையும் மாரி இல்லை வேளாண்மை மத்திபமாம்சோரர்ஜ பயமஅதிகமுண்டாம்
பழையோர்கள் சம்பாதியவுடைமை விற்று உண்பர்தேர்.

விளக்கம்

தண்ணீர் தட்டுப்பாடு விளைச்சல் குறைவு கள்வர் பயம் முன்னோர் சேர்த்து வைத்ததை விற்றுஉண்பர் என்பதாம்.

விகாரி ஆண்டு ஆரம்பம் ஆகும் கிரகநிலை கீழே கொடுக்கப்பட்டு
ள்ளது.

விளம்பி வருடத்தின் உடைய கடைசி 4 மாதங்களும் விகாரி வருடத்தின் முதல் நான்கு மாதங்களும் இதில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகள் இந்த 8 மாத நிகழ்வுகளுக்கு கவனம் தேவை .
விளம்பி வருடத்தில் விளம்புவது விகாரி வருடத்தில் விகாரம் ஆகிவிடும் .
வாக்கு ஸ்தானாதி
பதியாகிய சூரிய பகவான் வலுத்து அமர்ந்தாலும் குரு பார்வை பெற்றாலும் முயற்சி ஸ்தானத்திற்கு அதிபதி புதன் நீச்சமாகி இருப்பதால்
தேர்தல் குறித்து ஜோதிட ரீதியாக போடும் கணக்குகள் எல்லாம் பொய்ப்பதற்கு வாய்ப்பு உண்டு
கருத்து கணிப்புகள் தப்புவதற்கு வாய்ப்பு உண்டு

ஜோதிடம் பார்ப்பது வெளியே தெரிந்தால் கேவலம் என்று நினைத்துக்கொண்டு ஜோதிடர்களிடம் போய் ஜோதிடம் பார்த்தால் சோதிடர்களும் வெளியே சொல்லவில்லை என்றால் சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகக்கூடும்.

தன் வீட்டை பார்வை செய்யும் புதபகவான் செவ்வாய் பகவான்
சனி பகவான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் இளைஞர்களே.

நாட்டு பற்று உடையவர்களை தேசப்பற்று உடையவர்களை இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்
வேடதாரிகளை புறம் தள்ளப்படுவார்கள்
நாட்டு பற்று உள்ளவர்களுக்கு கோப்பு போலி வேடதாரிகளுக்கு ஆப்பு

கடகம் முதல்கும்பம் வரை சக்தி வீதிதனில் அப்பிரதட்சணமாக ஆறு கிரகங்கள் இருப்பதால் அதிக பெண்கள் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு உண்டு
இந்த தேர்தலில் பெண்களின் செல்வாக்கு அதிகரிக்கும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமெல்லாம் கொள்கையைப் பற்றி பேச முடியாது
இளைஞர்களால் திறமையான அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்
அரசியல்வாதிகள் பயந்து பயந்து ஓட்டு கேட்பார்கள்

யாரையும் யாரும் குறை சொல்லமுடியாத அளவில் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கப்படும்

சில இடங்களில் வேட்பாளரிடம் கையெழுத்து வாங்கியே ஓட்டளிக்கும் சூழ்நிலை உருவாகும்
இந்த தேர்தலில் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது
விகாரி வருடத்தில் தண்ணீருக்கான திட்டமிடும் காலம் இது

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
பங்குச்சந்தையில் புதிய உத்வேகம் ஏற்படும்

தான்தோன்றித்தனமான திருமணங்களால் இளைஞர்கள் தடுமாறும் கால கட்டம்

ஊடகங்களுக்கு புது சட்டம் வரும்

இந்த ஆண்டு நிறை குறைகள் இருந்தாலும் புதிய மலர்ச்சி உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு

இதுவரை சீரழிவு நிலையிலிருந்த தமிழ் ....இனிசிறுவர்களும் தமிழை கற்பார்கள் பேச்சளவில் இல்லாமல் செயலளவில் தமிழ் உயிர் பெறும்
குரு சனி கேது சேர்க்கை சித்தர்களின் சாபம் என்பதை குறிக்கிறது

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...