புதன், 4 ஆகஸ்ட், 2021

(Shivani Narayanan) latest photos

 

கடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம் கிளாமர் அழகி ஷிவானி போட்டோஸ் வைரல்


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் followers உள்ளனர். 

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் பயங்கரமாக வைரலானது. அதற்கு முன்னதாக ரெய்னாவுடன் புகைப்படம் எடுத்தும் இவர் வைரலானார்.

இந்நிலையில் நேற்று பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் ஒன்றை  ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்தற்போது வைரலாகி உள்ளார். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. அம்மா நீ தான் என் உலகம் என ஷிவானி நாராயணன் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

7 th pay commission DA /TA arriear news

 

7th Pay Commission முக்கிய செய்தி.... டி.ஏ. அரியர் தொகை கிடைக்குமா கிடைக்காதா?? எதிர்பார்ப்புடன் மத்திய அரசு ஊழியர்கள் .....

1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜூலை ச1 முதல், 17% க்கு பதிலாக 28% DA மற்றும் DR கிடைக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் இன்னும் மத்திய அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை (Arrear Amount) வழங்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்த அரியர் தொகை கிடைக்காது என்று உறுதியாக கூறி விட முடியாது. இது குறித்து அரசுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒன்றரை வருடங்கள் முடக்கப்பட்ட அகவிலைப்படி (Dearness Allowance) நிலுவைத் தொகை பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஜூன் 2021 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டதால், அதன் அரியர் தொகையை அளிப்பது பற்றி பேச எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜேசிஎம் செயலாளர் (பணியாளர் பக்கம்) தேசிய கவுன்சில் ஷிவ் கோபால் மிஸ்ரா, அகவிலைப்படியை அதிகரித்ததற்கு (DA Hike) அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.


ஆனால், நிலுவைத் தொகையைப் பற்றி பேசப்படாதது குறித்து அவர் சிறிது வருத்தப்பட்டார். மிஸ்ரா கூறுகையில், ‘ஒன்றரை வருட நிலுவைத் தொகை (18 மாதங்கள் டிஏ அரியர்) இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் நிச்சயமாக பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஊழியர்கள் என இவருக்கும் நன்மை பயக்கும் ஒரு வழி காணப்படும்.’ என்றார்.


28% % மொத்தமாக அளிக்கப்படும்


ஜூலை 14 ஆம் தேதி, அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த (DA Hike) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த அதிகரித்த அகவிலைப்படி ஊழியர்களின் செப்டம்பர் சம்பளத்தில் கிடைக்கும்.


இதனுடன், 2021 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். கடைசி மூன்று தவணைகள் மொத்தமாக அளிக்கப்பட உள்ளன. கொரோனா காரணமாக ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021 ன் அகவிலைப்படி முடக்கப்பட்டது. இப்போது இந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளது.

28% க்கு பிறகு அகவிலைப்படி 3% அதிகரிக்கும்


AICPI இன் சமீபத்திய தரவுகளிலிருந்து, அகவிலைப்படி ஜூன் 2021 இல் 3% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. அதாவது, 28 சதவீதமாக அதிகரித்த மொத்த அகவிலைப்படி,  இப்போது மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கும். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி - அகவிலை நிவாரணம் 31% ஆக அதிகரிக்கும்.


ஜூன் 2021 க்கான தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ தரவைப் பார்த்தால், குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்து 121.7 ஆக உள்ளது. இப்போது 2021 ஜூன் மாதத்தில் உதவித்தொகை 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். எனினும், இது பற்றி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை.


பிற கொடுப்பனவுகளிலும் பலன் கிடைக்கும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு  (Central Government Employees) செப்டம்பரில் அகவிலைப்படி அதிகரிப்பைத் தவிர பிற நன்மைகளும் கிடைக்கும், கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதில் பயணக் கொடுப்பனவு மற்றும் நகரக் கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.


ஓய்வூதியத்திற்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜூட்டி ஆகியவற்றிலும் பெரிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அகவிலைப்படி அதிகரிப்பின் தாக்கம் இந்த அனைத்து கொடுப்பனவுகளிலும் இருக்கிறது

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...